மற்றவங்க நம்மைப் பற்றி பேசுவது கேட்க எனக்கு அப்படி இருக்கு...!! கல்யாண வீட்டில் பொங்கி ஊத்திய பன்னீர்..!!

Published : Feb 26, 2020, 04:05 PM ISTUpdated : Feb 26, 2020, 04:28 PM IST
மற்றவங்க நம்மைப் பற்றி பேசுவது கேட்க எனக்கு அப்படி இருக்கு...!!  கல்யாண வீட்டில் பொங்கி ஊத்திய பன்னீர்..!!

சுருக்கம்

அவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார் .

அதிமுக ஆட்சியின் சிறப்புகளை மற்ற கட்சியினர் பேசிவருவது பெருமை அளிக்கிறது என துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.   விவசாயிகளுக்கும் மக்களுக்கும் பல நல்ல திட்டங்களை ஜெயலலிதாவின் ஆசியுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார் எனவும் அவர் கூறியுள்ளார் .  தஞ்சையில் திருமண விழாவில் கலந்துகொண்ட துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது:-  ஜெயலிதாவின் ஆசியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடந்து வருகிறது . 

தமிழகத்தின் உணவுத் தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது தஞ்சை தரணி , இது  புண்ணியபூமி ,  கடந்த  2007 ஆம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்தபோது ,  காவிரி நதிநீர்  பங்கீட்டில்  உள்ள  பிரச்சனைகளை சரி  செய்ய ஜெயலலிதா எவ்வளவு வலியுறுத்தினார்.  ஆனால் திமுகவும் காங்கிரசும் அதை கொஞ்சமும் கண்டுகொள்ளவில்லை .  பின்னர் நீண்ட நெடிய விசாரணையின் முடிவில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது .   மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய 33 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய சாதனையாக கருதுவது காவிரி நடுவர் இறுதித்  தீர்ப்பு அரசாணையை பெற்றுத்தந்தது என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டினார் . 

ஹைட்ரோ கார்பன் திட்டம் வருகிறதாமே என விவசாயிகள் அச்சமடைந்தனர்.   அவர்களின் அச்சத்தைப் போக்கி அவர்களின் வாழ்க்கையில் ஒளி தீபம் ஏற்றும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதாவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றினார் .  அதேபோல அதிமுக ஆட்சியின் சிறப்புகளை நாம் சொல்வதை விட மற்ற கட்சியினர் சொல்லி வருவது மிகவும் பெருமை அளிக்கிறது எனவும் பன்னீர் செல்வம் பேசினார். 
 

PREV
click me!

Recommended Stories

ஓநாய்களிடம் சிறுபான்மையினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..! கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன இபிஎஸ்..!
125 நாள் வேலையை வரவேற்கிறோம்..! ஆனால்..? பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!