மொத்தபழியும் எங்கள்மீதா..? சட்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்போம்..!! மர்கஸ் நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத்தின் தகவல்

By Ezhilarasan BabuFirst Published Apr 1, 2020, 9:58 AM IST
Highlights

ஒருபோதும் எந்தவொரு சட்ட விதிகளையும் மீறவில்லை. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த பார்வையாளர்களிடம் எப்போதும் இரக்கத்துடன் செயல்பட முயன்றோம்.

டெல்லியில் நடந்த மத ரீதியிலான  மாநாட்டில்  கலந்துகொண்டு திரும்பியவர்களுக்கு கொரோனா தொற்று ஏறப்ட்டுள்ள நிலையில் அந்த மாநாட்டை  நடத்திய நிஜாமுதீன் மர்கஸ் அமைப்பு என்ன நடந்த து என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளது, அதன் விவரம் :-  மர்கஸ் நிஜாமுதீன் தப்லீக்  ஜமாஅத்தின் சர்வதேச தலைமையகமாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. உலகமெங்கும் யாத்ரீகர்கள், பக்தர்கள், பயணிகள் இந்த இடத்துக்கு வருகிறார்கள். அவர்கள் வருகையையொட்டி, பங்கேற்பை உறுதி செய்து நாங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்கு முன்கூட்டியே திட்டமிடப்படுபவை. மாண்புமிகு பிரதமர்  மார்ச் 22, 2020 அன்று 'மக்கள்  ஊரடங்கு' அறிவித்த உடன் , மர்கஸ் நிஜாமுதீனில் நடந்து வந்த நிகழ்ச்சி   உடனடியாக நிறுத்தப்பட்டது, இருப்பினும் 2020 மார்ச் 21 அன்று நாடு முழுவதும் ரயில் சேவைகளை திடீரென ரத்து செய்ததால்,  ரயில் வழியாக வந்திருந்த  ஒரு பெரிய குழு மர்கஸ் வளாகத்தில் சிக்கிக் கொண்டது. 

மார்ச் 22, 2020 அன்று, "மக்கள்  ஊரடங்கு" அனுசரிக்கப்பட்டது, அதன்படி பார்வையாளர்கள் மாண்புமிகு பிரதமரின் உத்தரவின்படி இரவு 9 மணி வரை வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. ரயில்வே தவிர வேறு வழிகளில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான திட்டங்கள்  எதையும் செயல்படுத்த முடியவில்லை. மக்கள் ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணிக்கு முடிவடைவதற்கு  முன்னர்,  மாண்புமிகு டெல்லி முதலமைச்சர் டெல்லி முழுவதும்   2020 மார்ச் 23 ஆம் தேதி காலை 6 மணிக்கு தொடங்கி 2020 மார்ச் 31 வரை Lock Down செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் வந்திருந்தவர்கள் சாலை போக்குவரத்து மூலமாக  வீடு திரும்புவதற்கான வாய்ப்புகள் மேலும் குறைந்தது. இதுபோன்ற சவாலான சூழ்நிலை இருந்தபோதிலும், மர்கஸ் நிர்வாகத்தின் உதவியுடன், சுமார் 1500  நபர்கள் மர்கஸ்  நிஜாமுதீனை விட்டு வெளியேறினர். பிரதமர் மோடி ஊரங்கு உத்தரவைப் பிறப்பித்த பின் இங்கு தங்கியிருந்த பலருக்கும் வெளியே செல்ல இடமில்லாததால், இங்கு தங்கவைத்தோம். அவர்களுக்குப் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கையும் வழங்கப்பட்டது. கடந்த 24-ம் தேதி ஹஸ்ரத் நிஜாமுதீன் காவல் நிலையத்திலிருந்து எங்கள் மையத்தை மூட சம்மன் அனுப்பப்பட்டது. அதற்கு எங்கள் தரப்பில் இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கியிருக்கிறார்கள். 

அவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன அனுமதி வழங்கிட வேண்டும் எனக் கேட்டிருந்தோம்.மேலும், 17 வாகனங்கள், அதன் பதிவு எண், ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமம் விவரம் உட்பட  அனைத்தையும் காவல் நிலைய அதிகாரிக்குக் கடிதம் மூலம் தெரிவி்த்திருந்தோம். அந்த வாகனங்களை இயக்க அனுமதியளித்தால் இங்கு சிக்கியிருக்கும் மக்கள் சொந்த மாநிலங்களுக்குச் சென்றுவிடுவார்கள் எனத் தெரிவித்தோம். ஆனால், இன்று வரை அனுமதி கிடைக்கவில்லை. மார்ச் 25, 2020 அன்று, தாசில்தார் அவர்கள் மருத்துவ குழுவுடன்  மர்கஸுக்கு விஜயம் செய்தார். அவரின் ஆய்வுக்கும் பார்வையாளர்களின் பட்டியலைத் தயாரிப்பதற்கும் முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டது. அவர்களில் பலர் மருத்துவர்களால் முழுவதும்  பரிசோதிக்கப்பட்டனர். 26 மார்ச் 2020 அன்று, SDM (Sub Divisional Magistrate) மர்க்கஸ் நிஜாமுதீனைப் பார்வையிட்டார், மேலும் எல்.டி.யுடன் மேலதிக சந்திப்புக்கு எங்களை அழைத்தார். SDM (Sub Divisional Magistrate)யை சந்தித்தோம். மேலும் சிக்கித் தவிக்கும் பார்வையாளர்களைப் பற்றி அவருக்கு விளக்கினோம். நாங்கள் ஏற்பாடு செய்த வாகனங்களுக்கு மீண்டும் அனுமதி கோரப்பட்டது.அடுத்த நாள், அதாவது 2020 மார்ச் 27, ஆறு பேர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின் மார்ச் 28, 2020, இங்கு வந்த மருத்துவர்கள் குழு,  இங்கிருந்த 33 பேரை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பின் போலீஸார் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸுக்கும் பதில் அனுப்பியுள்ளோம்’’. 

நேற்று, மார்ச் 30, 2020 அன்று, சமூக ஊடகங்களில் ஒரு வதந்தி பரவத் தொடங்கியது, COVID-19 பாதிக்கப்பட்டவர்கள் மர்க்கஸில் இருப்பதாக கூறப்பட்டது. சில மரணங்கள் இதே காரணமாக நிகழ்ந்துள்ளன என்றும் பரப்பப்படுகிறது. எதிர்பாராத விதமாக,  டெல்லியின் மாண்புமிகு முதலமைச்சர், மர்கஸின் நிர்வாகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகக் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம்  கூறியது .மேற்சொன்ன தகவல்களை மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம் உறுதிப்படுத்த முனைந்திருந்தால், அதிகாரிகள் தாங்கள் மர்கஸிற்கு வந்ததையும் மீதமுள்ள பார்வையாளர்களை திரும்ப அனுப்புவதற்காக  மர்கஸால் நீட்டிக்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் அவருக்கு அறிவித்திருப்பார்கள் என்பதை  தாழ்மையுடன் கூறிக்கொள்கிறோம்.

இந்த முழு அத்தியாயத்தின் போது, மர்கஸ் நிஜாமுதீன் ஒருபோதும் எந்தவொரு சட்ட விதிகளையும் மீறவில்லை. மேலும் பல்வேறு மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வந்த பார்வையாளர்களிடம் எப்போதும் இரக்கத்துடன் செயல்பட முயன்றோம். தற்போதைய தொற்றுநோய்களின் சவாலை முறியடிக்க உதவும்  நோக்கத்துடன்  மர்கஸ் நிஜாமுதீன் முழு வளாகத்தையும்  தாழ்மையுடன் வழங்க விரும்புகிறோம். மர்கசின்  100 ஆண்டுகால செயல்பாட்டில் நிர்வாகம் , அதிகாரிகளுடன் ஒத்துழைத்து, சட்டத்தை  நிலைநிறுத்தும் ஒரு களங்கமற்ற வரலாற்றை மர்கஸ் நிஜாமுதீன் கொண்டுள்ளது. COVID-19 இன் தற்போதைய சவாலில், மர்கஸ் சட்ட அமலாக்க அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கும். மேலும் அவர்கள் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களுக்கும் ஒத்துழைப்பு கொடுப்போம் என்பதை 
கூறிக்கொள்கிறோம்.
 

click me!