அதை பற்றி மட்டும் கேட்ட சப்புன்னு அடிச்சி புடுவேன்... அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சை பேச்சு..!

By vinoth kumarFirst Published Mar 19, 2021, 12:40 PM IST
Highlights

அமமுக குறித்து கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமமுக குறித்து கேள்வி கேட்டால் சப்பென்று அடித்துவிடுவேன் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியது செய்தியாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மோடியா, இந்த லேடியா என ரைமிங்கில் சவால் விட்டு வாக்குகளையும் மக்களின் மனங்களையும் அள்ளியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. அதே ரைமிங்கோடு கொஞ்சம் டைமிங்கையும் சேர்த்து ஜெயலலிதா மறைந்த பின்னர் மோடி தான் எங்கள் டாடி என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

மேலும், திமுகவை தொட்டு பார்க்க நினைத்தால் கையை வெட்டுவேன் சர்ச்சைப் பேச்சுக்கு சொந்தக் காரரான ராஜேந்திர பாலாஜி கடந்த இரு முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இம்முறை ராஜபாளையம் தொகுதிக்கு மாறிவிட்டார். சிவகாசி தொகுதியில் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பிய நிலையில் கட்சி தலைமையிடம் பேசி தொகுதி மாறி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார். அப்போது, அவரிடம் அமமுக குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, கோபமடைந்த அமைச்சர் ராஜேந்திரபாலாஜி அமமுக குறித்து கேள்வி கேட்கக்கூடாது, அப்படி கேள்வி கேட்டால் சப்பென்று அடித்து விடுவேன் என சர்ச்சை அளிக்கும் வகையில் கூறியுள்ளார்.

click me!