என் ஃபிளாஸ் பேக்கை நினைவுப்படுத்தியது ஜெய்பீம்…. நெகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

By Narendran SFirst Published Nov 1, 2021, 3:49 PM IST
Highlights

ஜெய்பீம் படம் மனதை கணமாக்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

ஜெய்பீம் படம் மனதை கணமாக்கிவிட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், ஜெய்பீம் படத்தை நேற்று பார்த்ததாகவும் அதன் நினைவுகள் இரவு முழுவதும் மனதைக் கணமாக ஆக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். விளிம்புநிலை இருனர் மக்களின் வாழ்வியலையும் , அவர்கள் அனுபவித்து வரும் துன்ப துயரங்களையும் இதனைவிடத் துல்லியமாக , கலைப்பூர்வமாகக் காட்சிப்படுத்த இயனது என்பதைக் காட்டிவிட்டீர்கள் என்று குறிப்பிடுள்ள மு.க.ஸ்டாலின், நடந்த ஒரு நிகழ்ச்சியை மையமாக வைத்து புனையப்பட்ட திரைக்கதையாக இருந்தாலும் அது பார்வையாளர் மனதில் ஏற்படுத்திய தாக்கம் என்பது மிகமிகக் கனமானதாக இருக்கிறது என்றும் சில நேரங்களில் சில காவல் துறை அதிகாரிகள் செய்யும் தவறுகள், அந்தத் துறைக்கே மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி விடுகிறது என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், உண்மையை வெளிக்கொண்டு வர இன்னொரு காவல் துறை அதிகாரியே துணையாக இருக்கிறார் என்பதையும் காட்டி இருக்கிறீர்கள் என்பதனை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேர்மையும், மனசாட்சியும் கொண்ட அதிகாரிகளால் உண்மை நிலைநாட்டப்படும் என்பதையும் காட்டி உள்ளீர்கள் என்றும் இந்தப் படம் சட்டமும் நீதியும் கொண்டு எத்தகைய அவலத்தையும் துடைத்தெறிய முடியும் என்பதையும் எடுத்துச் சொல்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு வழக்கறிஞர், ஒரு காவல் துறை அதிகாரி ஆகிய இருதரப்பும் நினைத்தால் சமூக ஒழுங்கீளங்களைத் தடுத்து நிறுத்த முடியும். அமைதியான , அதேநேரத்தில் , அழுத்தமான வழக்கறிஞராக நண்பர் சூர்யா திறம்பட நடித்துள்ளார். நடித்துள்ளார் என்பதைவிட , வழக்கறிஞர் சந்துருவாகவே வாழ்ந்துள்ளார். இக்கதையைத் தேர்வு செய்ததும் , அதனைப் படமாக எடுத்ததும், அதில் தானே நடிந்ததுமென மூன்று பாராட்டுகளை சூர்யா பெறுகிறார் என்று கூறிய மு.க.ஸ்டாலின், கதைக்களத்தை கலைக்களமாக மாற்றிச் சிறப்பாக இயக்கியுள்ள இயக்குநர் த.செ. ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். இதுபோன்ற படங்கள் ஏரானமாக வரவேண்டும் என்பதே தனது ஆசையுப் விருப்பமும் என்று குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இருளர் குறித்த படம் எடுத்ததோடு தனது கடமை முடிந்துவிட்டது எனக் கருதாமல் , பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் மேம்பாட்டுக்கு ஒரு கோடி ரூபாய் நிதியினை நண்பர் சூர்யா வழங்கியது தன்னை நெகிழச் செய்தது என்றும் இது இருனர் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியாகும் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற செயற்கரிய செயல்களை அனைவரும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜெய்பீம் படம் பார்க்க தான் சென்றபோது சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சத்துருவை சந்தித்ததாகவும் அவர் தன்னிடம் நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கையைக் கொடுத்தார்கள் என்றும் தெரிவித்தார். அது மிசா சட்டத்தின்படி நாங்கள் கைது செய்யப்பட்டது குறித்த விசாரணை ஆணையத்தின் அறிக்கை என்று விளக்கிய அவர், காவல் நிலையம் ஒன்றில் நடந்த இதேபோன்ற தாக்குதல்நான் சென்னை மத்திய சிறையில் 1976 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள் இரவு தனக்கும் நடந்ததாகவும், தன் மீது விழுந்த பல அடிகளைத் தாங்கியவர் மரியாதைக்குரிய சிட்டிபாபு என்றும், அதனால் அவரது உயிரே பறிபோனது என்றும் வருத்தம் தெரிவித்தார். அன்று நடந்த சித்திரவதைகளை ' சிறை டைரி'யாக சிட்டிபாபு எழுதி உள்ளார்கள் என்றும்  இந்த நினைவுகள் அனைத்தும் நேற்று ஜெப்பீம் பார்த்துவிட்டு வெளியில் வந்தபோது தன் மனக்கண் முள் நிழலாடியது என்றும் குறிப்பிட்டுள்ள மு.க.ஸ்டாலின், இப்படி பல்வேறு தாக்கங்களை தன்னுள் ஏற்படுத்தக் காரணமான ' ஜெய்பீம் " படக் குழுவினருக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொண்டார். 

click me!