தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ மிஷனரிகள்தான் காரணம்… சர்ச்சையை கிளப்பிய சபாநாயகர் அப்பாவு!!

By Narendran SFirst Published Jul 25, 2022, 10:59 PM IST
Highlights

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ மிஷனரிகள்தான் காரணம் என்றும், கத்தோலிக்கப் பணிகள் இல்லாவிட்டால் தமிழகம் மற்றொரு பீகாராக மாறியிருக்கும் என்றும் தமிழக சட்டசபை சபாநாயகர் எம்.அப்பாவு தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தமிழகத்தின் வளர்ச்சிக்கு கிறிஸ்தவ மிஷனரிகள்தான் காரணம் என்றும், கத்தோலிக்கப் பணிகள் இல்லாவிட்டால் தமிழகம் மற்றொரு பீகாராக மாறியிருக்கும் என்றும் தமிழக சட்டசபை சபாநாயகர் எம்.அப்பாவு தெரிவித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கத்தோலிக்க மிஷனரிகள் தான் தனது வாழ்க்கையை வடிவமைத்ததாக கூறிய அவர், அரசு உண்ணாவிரதம் மற்றும் கடவுளை பிரார்த்தனை செய்யும் மக்களுக்கு சொந்தமானது.

இதையும் படிங்க: “நீட் தேர்வு தோல்வியால் கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி தற்கொலை” .. மீண்டும் உளறிக்கொட்டிய மாஜி அமைச்சர்.!

இந்த அரசாங்கம் உங்களால் உருவாக்கப்பட்டது என்பது முதல்வர் [மு.க.ஸ்டாலினுக்கு] தெரியும். நீங்கள் [கத்தோலிக்க தூதுவர்கள்] உங்கள் முதல்வரிடம் சென்று பேசுங்கள், நான் உங்களுக்கு ஆதரவளிப்பேன். உங்களை நீக்கினால் தமிழ் வளர்ச்சி இருக்காது. மிஷனரிகள் இல்லை என்றால், தமிழகம் பீகார் போல் இருந்திருக்கும். கத்தோலிக்க மிஷனரிகள் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். தமிழகத்தின் அடித்தளம் உங்கள் பணியால் அமைக்கப்பட்டது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜூலை 28 அன்று நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை… அறிவித்தது தமிழக அரசு!!

அவரின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சபாநாயகர் அப்பாவு இந்தியா டுடேவுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் பேசிய அவர், வரலாறு மட்டுமே குறிப்பிட்டதாகக் கூறினார். கிறிஸ்தவ மிஷனரிகள் தான் அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்தார்கள். கிறிஸ்தவ மிஷனரிகள் சமூக சமத்துவத்தை கொண்டு வந்தனர். திராவிட இயக்கம் அவர்களின் பணியின் நீட்சி என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். 

click me!