நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.
வரும் ஆகஸ்டு மாதம் வங்கிகளுக்கு அதிக விடுமுறை வருவதால் வாடிக்கையாளர்கள் தங்களது சேவைகளை உரிய நாட்களில் முன்பே பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.
நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் பொது விடுமுறை நாட்கள் அறிவிக்கப்படுவது வழக்கம். அதன்படி தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 1 – ஞாயிற்றுக்கிழமை. ஆகஸ்ட் 8 –ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை, ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 20 – மொகரம், ஆகஸ்ட் 22 – ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 28 – நான்காம் சனிக்கிழமை, ஆகஸ்ட் 29 – ஞாயிற்றுக்கிழமை, ஆகஸ்ட் 30 – கிருஷ்ண ஜெயந்தி ஆகிய 9 நாட்களில் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.