வைரஸ் கிருமியுடன் மருத்துவமனையில் ஓடும் பாலிவுட் பாடகி..!! கொரோனா வந்தும் அடங்காத திமிர்...!!

By Ezhilarasan BabuFirst Published Mar 23, 2020, 3:26 PM IST
Highlights

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 41 வயதுடைய பாலிவுட்  பாடகி கணிக கபூர் .  இவர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி லண்டனிலிருந்து லண்டனில் இருந்து  அம்மாசி விமான நிலையம் வந்திறங்கினார் . 

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும்  பாடகி கணிக கபூர் மருத்துவர்களுக்கு போதிய ஒத்துழைப்பு வழங்குவதில்லை என அவர் சிகிச்சை பெற்று வரும் சிஎம்ஓஏ மருத்துவமனையின் இயக்குனர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் .  உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் 41 வயதுடைய பாலிவுட்  பாடகி கணிக கபூர் .  இவர் கடந்த மார்ச் 14-ஆம் தேதி லண்டனிலிருந்து லண்டனில் இருந்து  அம்மாசி விமான நிலையம் வந்திறங்கினார் .  பின்னர் அங்கிருந்து தாஜ் ஹோட்டலுக்கு  சென்ற அவர்.  அங்கு அறை எடுத்து தங்கியதுடன் அங்கிருந்து  பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று கலந்து கொண்டார் .  விஜபிக்கள் மற்றும் அரசியல் புள்ளிகள் நடந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட அவர்,  உறவினர்களையும் சந்தித்துள்ளார். 

இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .  இந்நிலையில்  அவருடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்கள் கலக்கமடைந்துள்ளனர் .  அதில் பல முக்கிய அரசியல் புள்ளிகள் இடம் பெற்றுள்ளனர் .  இந்நிலையில் கனிகா கபூர் தனிமைப்படுத்தப்பட்ட உத்தர பிரதேசத்தின் தலைநகரில் உள்ள சஞ்சய்காந்தி முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் .  இந்நிலையில் அவர்  தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டு அதிகாரி பாடகி கனிகா கபூர் ,  சிகிச்சைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என புகார் அவர் மீது  தெரிவித்துள்ளார் .  அதில் கனிகா கபூர் முறையாக சிகிச்சைக்கு  ஒத்துழைக்கவில்லை ,  மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சிறந்த அறையை அவருக்குக் கொடுத்தும்  அவர் குதர்க்கமாக நடந்து கொள்கிறார் .  அவரைப் பாதுகாக்கவே கூடுதல் காவலர்களை ஏற்பாடு செய்துள்ளோம் .  ஏனெனில் அவர் ஓடிப்போய் மருத்துவமனையில் உள்ள இன்னும் பலருக்கு அவர் தொற்று ஏற்படுத்த  வாய்ப்புள்ளது.   இதனால் அவரை அறிவுறுத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளார் . 

இந்நிலையில் அந்த மருத்துவமனையின் மருத்துவர் அகர்வால் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரோஜினி நகர் காவல் நிலையத்தில் கனிகா மீது புகார் தெரிவித்துள்ளார் கொரொனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை கட்டுப்படுத்த அரசாங்கத்தால் பட்டியலிடப்பட்ட விதிமுறைகளில் கனிகா அலட்சியம் காட்டி வருகிறார் .  கடந்த 14ஆம் தேதி அவர் விமான நிலையத்தில் வந்த போதே  அவரை தனிமைப்பட்டு இருக்கும்படி அனுமதிக்கும்படி கேட்டுகொண்டார்.   ஆனால் அவர் தொடர்ந்து பல இடங்களில் சுற்றி பலருக்கும் கொரோனா வர காரணமாக இருந்துள்ளார் என அவர் தெரிவித்துள்ளார் .  இந்நிலையில் அவரது ஆண் நண்பரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர் . அதேபோல  தொழிலதிபர் ஓஜாஸ் தேசாயை போலீசார் தேடி வருகின்றனர் .  அவர் பாடகி தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்து கடந்த 16ஆம் தேதி வெளியேறியுள்ளார், இதுவரையில் அவரைப்பற்றி சரியான முகவரி கிடைத்தால் அவரை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது .  இந்நிலையில் கணிக கபூர் தங்கியிருந்ததையடுத்து   தாஜ் ஹோட்டலை மூடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   இந்நிலையில் கனிகா கபூருடன்  உரையாடிய 11 ஊழியர்களை தனிமைபடுத்த ஒட்டல் நிர்வாகம் அனுப்பிஉள்ளது குறிப்பிடதக்கது..

click me!