ஓபிஎஸ்-இபிஎஸ்யை சந்தித்து பேசியது ஏன்..? ஜேபி.நட்டா கூறிய ரகசிய தகவல் என்ன.? அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு தகவல்

Published : Feb 03, 2023, 02:25 PM IST
ஓபிஎஸ்-இபிஎஸ்யை சந்தித்து பேசியது ஏன்..? ஜேபி.நட்டா கூறிய ரகசிய தகவல் என்ன.? அண்ணாமலை வெளியிட்ட பரபரப்பு தகவல்

சுருக்கம்

இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் உறுதியுடன்  ஒன்றுபடுவது மிக அவசியம். இது தொடர்பாக தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன் ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகத்தில் உள்ள பிற பிரச்சினைகள் குறித்து பேசியதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக சமாதான பேச்சுவார்த்தை

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றைதலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இந்தநிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் இரண்டு அணியும் தனித்தனியாக மோதவுள்ளதால் இரட்டை இலை முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் பாஜக மேலிட பொறுப்பாளர் சிடி.ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து இந்த சந்திப்பு தொடர்பாக சிடி.ரவி மற்றும் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், 1972-ல் அ.தி.மு.க உருவானபோது டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள், தி.மு.க.வை ‘தீய சக்தி’ என்று அழைத்தார். அந்த நிலையிலிருந்து, தற்போது 2023-வரை திமுக இன்னும் மாறவில்லை. செல்வி ஜெயலலிதா அம்மாவும், தான் உயிருடன் இருக்கும் வரை, திமுகவை ”தீய சக்தி” என்றுதான் அழைத்தார்.

முடங்கும் நிலையில் இரட்டை இலை.! சமரச பேச்சு நடத்தும் பாஜக.! இபிஎஸ்யை தொடர்ந்து ஓபிஎஸ்யையும் சந்தித்த அண்ணாமலை

திமுகவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நாளுக்கு நாள் மக்கள் செல்வாக்குப் பெறாத நிலையில், ஈரோடு கிழக்கில் இந்த இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. மேலும், திமுக என்ற கட்சி, ஒரு தனிப்பட்ட குடும்ப லாபத்திற்காகவும், அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு எதிராகவும், தொடர்ந்து செயல்படுகிறது. இதனால் மக்களிடையே தி.மு.க., ஆட்சிக்கு எதிராக பெரும் எதிர்ப்பு மனநிலை உள்ளது. மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, போதைப் பொருட்கள் நடமாட்டம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் என்ற மக்கள் விரோதப் போக்குகள் ஒருபுறம்…, அது மட்டுமின்றி, தமிழ்க் கலாச்சாரத்தின் மீது திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், மூத்த தலைவர்கள் தொடர்ந்து நடத்தி வரும் வெறுப்புணர்வும் , தாக்குதல்களும் மக்களிடையே பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

வடஇந்தியாவில் பாஜக என்ன செய்து ஆட்சியை பிடித்தது எங்களுக்கு தெரியும்.. எச்சரிக்கையாக உள்ளோம்.. பொன்னையன்.!

ஓபிஎஸ் - இபிஎஸ்யை சந்தித்தது ஏன்.?

கடைமட்ட கட்ட பஞ்சாயத்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களின் அதிகரிப்பும், அதைக் கட்டுப்படுத்த வழியில்லாத திமுகவுக்கு எதிராக, தமிழ் மக்கள் இருப்பதை நமக்கு தெளிவாகக் காட்டுகிறது.திமுக பணபலம் மற்றும் அரசு இயந்திரங்களை தவறாக பயன்படுத்துவதால், இடைத்தேர்தல் முன்னேற்பாடுகள் எப்படி நடக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போதே ஈரோட்டில் நடப்பதையெல்லாம் பார்த்து வருகிறோம். அதனால்தான் இந்த இடைத்தேர்தலில் இந்த தீய சக்தியை தோற்கடிக்க தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் உறுதியுடன்  ஒன்றுபடுவது மிக அவசியம்.இன்று காலை தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் திரு. ஓ.பன்னீர்செல்வம், ஈரோடு இடைத்தேர்தல் மற்றும் தமிழகம் தொடர்பான பிற பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

ஜேபி நட்டா கூறியது என்ன.?

இது ஒரு நல்ல முன்னேற்றம், நமது தேசிய தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் சார்பாக சில விஷயங்களை தெரிவித்தேன். அதையெல்லாம் உங்களிடம் தனித்தனியாக, என்ன பேசினோம் என்பதை, இப்போது நான் வெளியிட இயலாது. இந்த இடைத்தேர்தலில் தமிழகத்தின் நலனைக் கருத்தில் கொண்டு திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்ற மக்கள் விருப்பத்தை  இருவரிடமும் வலியுறுத்தியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

முடங்கும் நிலையில் இரட்டை இலை.! சமரச பேச்சு நடத்தும் பாஜக.! இபிஎஸ்யை தொடர்ந்து ஓபிஎஸ்யையும் சந்தித்த அண்ணாமலை

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ராஷ்ட்ரபதிபவன் விருந்தில் லெக் பீஸ் எங்கே.! கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.!
விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!