இந்தியா முழுவதும் பாஜக ஆளுமை செலுத்துது.. தமிழகத்தில் வாலைக்கூட ஆட்ட முடியல.. உச்சிக்குளிரும் திருமா.!

Published : Feb 17, 2022, 09:34 PM IST
இந்தியா முழுவதும் பாஜக ஆளுமை செலுத்துது.. தமிழகத்தில் வாலைக்கூட ஆட்ட முடியல.. உச்சிக்குளிரும் திருமா.!

சுருக்கம்

அதிமுகவுக்கு நல்ல ஆற்றல்மிக்க தலைவர் இல்லை. திமுகவுக்கு கிடைத்தது போல நல்ல ஆளுமை வாய்ந்த தலைவர் அதிமுகவுக்கு இல்லை என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். 

இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் பாஜகவால் ஆளுமை செலுத்த முடிகிறது ஆனால் தமிழகத்தில் வாலாட்ட முடியவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

கடலூர் மாநகராட்சியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தார். பிரசாரத்தில் அவர் பேசுகையில், “தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது முதல் தலைசிறந்த, வளர்ச்சி மிகுந்த மாநிலமாக சாதனை புரிந்துள்ளது. இந்தியாலேயே தலை சிறந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் என்று சர்வே முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக தலைமையில் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. ஆனால், இப்போது உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கூட்டணி சிதறி  போய்விட்டது. அதிமுக ஒற்றுமையாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. 

அதிமுக கூட்டணியில் அதிமுக, பாமக, பாஜக என ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக செயல்பட்டன. இதனாலேயே அந்தக் கூட்டணி சிதைந்து போனது. ஆனால், திமுக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்டுக்கோப்பாக அமைத்தது. அதே கூட்டணிதான் உள்ளாட்சித் தேர்தலிலும் தொடர்கிறது. அதிமுக கூட்டணியில் நல்ல தலைமை கிடையாது. அதிமுகவுக்கு தலைவர்களே இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்  பிறகு அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் பதவிக்கு ஆளே இல்லை. அதிமுகவுக்கு நல்ல ஆற்றல்மிக்க தலைவர் இல்லை. திமுகவுக்கு கிடைத்தது போல நல்ல ஆளுமை வாய்ந்த தலைவர் அதிமுகவுக்கு இல்லை என்பதை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள். 

தமிழ்நாட்டின் மதவெறி சக்திகள் ஆக்கிரமிக்க முயற்சித்து வருகிறார்கள், ஊடுருவ நினைக்கிறார்கள். பாஜக, ஆர்எஸ்எஸ் சங்பரிவார் அமைப்புகள் மூலம் மறைமுகமாக முகமூடிகளை அணிந்து கொண்டு தமிழகத்தில் ஊடுருவ நினைக்கிறார்கள். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் அவர்களால் ஆளுமை செலுத்த முடிகிறது. ஆனால், தமிழகத்தில் வால் ஆட்ட முடியவில்லை. காரணம், அவர்கள் வாலாட்டினால் வாலை ஒட்ட நறுக்க கூடிய ஆட்சியாகவும் கூட்டணியாகவும் திமுக கூட்டணி உள்ளது. ஒரு வேளை தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தால் இங்கே அதிமுக ஆட்சியாக இருந்திருக்காது. 

மாறாக பாஜகவின் கைப்பவை கட்சியாகத்தான் இருந்திருக்கும், ஏனென்றால் கடந்த 5 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியை நடத்திவந்ததே பாஜகதான். அவர்கள் அதிமுக ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காகவே அவர்கள் கட்டுப்பாட்டிலேயே செயல்பட்டு வந்தனர். தலைசிறந்த தமிழகம் முன்னேற்றம் காண திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினருக்கு தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்று திருமாவளவன் பேசினார். 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!