கைவிடாத பாஜக.. அதிமுகவில் இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி... யார் யார் அந்த இரண்டு எம்.பி.,க்கள்..?

Published : May 28, 2021, 05:37 PM IST
கைவிடாத பாஜக.. அதிமுகவில் இருவருக்கு மத்திய அமைச்சர் பதவி...  யார் யார் அந்த இரண்டு எம்.பி.,க்கள்..?

சுருக்கம்

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு  வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

பாஜக தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமாருக்கு  வாய்ப்பு அளிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி பா.ஜ.க இணைந்து போட்டியிட்டது. அந்தத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணி படுதோல்வியடைந்தது.

 

தமிழகத்திலிருந்து அ.தி.மு.கவைச் சேர்ந்த ரவீந்திரநாத் மட்டும் அக்கூட்டணியில் வெற்றி பெற்றிருந்தார். எனவே, அவருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழங்கப்படவில்லை. அதனால், தமிழகத்தைச் சேர்ந்த யாரும் மத்திய அமைச்சரவையில் இடம்பெறாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், ஜூலை மாதத்தில் மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. அப்போது, புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அதில், காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, அசாம் மாநில முன்னாள் முதல்வர் சர்வானந்த் சோனாவால், பீகார் மாநில பா.ஜ.க மூத்த தலைவர் சுஷில் மோடி, ஜெய்பாண்டா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஏற்கெனவே, நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்து தேர்தலைச் சந்தித்த சிவசேனா, அகாலி தளம் ஆகிய கட்சிகள் கூட்டணியிலிருந்து விலகிவிட்டன. எனவே, இருக்கும் கூட்டணியை தக்கவைக்கும் பொருட்டு தமிழகச் சேர்ந்த அ.தி.மு.க எம்.பிகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கின்றன. அதன்படி, அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத், மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை ஆகியோருக்கு மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!