தேர்தல் முடிவுக்கு பிறகு இதுதான் நடக்கும்... மு.க.ஸ்டாலின் திட்டத்தை அம்பலப்படுத்திய டிடிவி. தினகரன்..!

By vinoth kumarFirst Published May 4, 2019, 12:36 PM IST
Highlights

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வெறியின் காரணமாக திமுகவுக்கு சென்றிருப்பதாக டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி வெறியின் காரணமாக திமுகவுக்கு சென்றிருப்பதாக டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

கரூர் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சாகுல் அமீதை ஆதரித்து டிடிவி. தினகரன் பள்ளப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில் இந்த தேர்தலோடு தமிழ்நாட்டின் அத்தனை உரிமைகளையும் அடகு வைத்த நோட்டீஸ் பழனிச்சாமியும், தர்மயுத்தம் பன்னீர்செல்வத்திற்கும் முடிவு கட்டப்படும். 

திமுக ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. எதையாவது சொல்லி திமுக ஆட்சிக்கு வரவேண்டும் என நினைக்கிறது. பாஜகவின் ஏ டீம் அதிமுக என்றால், பி டீம் திமுக. பதவி மற்றும் சுயநலத்துக்காக எப்போது வேண்டுமானாலும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்துக்கொள்ளும் என விமர்சனம் செய்துள்ளார். 

நான் ஏற்கனவே சொன்னது போல என் வாழ்நாளில் பாஜகவுடன் கூட்டணி வைக்கமாட்டேன். என்னை அழிக்க நினைத்தாலும், சிறையில் தள்ளினாலும் 20 ஆண்டுகள் கழித்து வந்து பாஜகவை எதிர்ப்பேன் என்றார். செந்தில் பாலாஜி பதவி வெறியின் காரணமாக திமுகவுக்கு சென்றுள்ளார். நான் பதவிக்கு ஆசைப்படாதவன். அடுத்தவர்களுக்கு பதவி கொடுத்து அழகு பார்த்தவர்கள் நாங்கள் என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

click me!