ஊழலில் அதிமுக திமுகவுக்கு வேறுபாடு இல்லை...!! ரஜினிக்காக தனி ரூட்டுபோட்டு கொடுத்த அடிட்டர் குருமூர்த்தி..!!

By Ezhilarasan BabuFirst Published Jan 15, 2020, 4:13 PM IST
Highlights

முதன்முதலில்  எம்ஜிஆர் அவர்கள்தான் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தார், நாத்திக அரசியலை மாற்றினார், எனவே தனக்கு  முன்னிருக்கும்  பொறுப்பு  என்ன என்பது இப்போது நடிகர் ரஜினிக்கு தெரியும் என்று பேசினார். 

ஊழல் செய்வதில் அதிமுக திமுகவுக்கு எந்த வேறுபாடும் இல்லை என துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர்ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார் .  துக்ளக் பத்திரிகையின் 50ஆவது ஆண்டு விழா சென்னையில் நடந்தது .  அதில் நடிகர் ரஜினிகாந்த் , ஆடிட்டர் குருமூர்த்தி,  துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .  முன்னதாகப் பேசிய ரஜினி ,  கையில் முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்றும் ,   கையில் துக்ளக் பத்திரிக்கை வைத்திருந்தால் அறிவாளிகள் என்றும்  பேசியது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .  பலரும்  ரஜினியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் . 

 

இந்நிலையில் அங்கு  பேசிய  ஆடிட்டர் குருமூர்த்தி ஊழல் செய்வதில் திமுகவும் , அதிமுகவும் ஒன்றுதான் என தெரிவித்திருப்பது,  சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது தொடர்ந்து பேசிய அவர் ,  குடியுரிமை சட்ட விவகாரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் நிலையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.  இது ஆபத்தானது . இதை  எதிர்ப்பதால் லாபம் இல்லை என்பதால்தான் திமுக ,  சிவசேனா போன்ற கட்சிகள் நேற்று டெல்லியில் நடந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றார் .  பாபர் மசூதி விவகாரத்தில் இந்துக்கள் - இஸ்லாமியர்களுக்கு இடையே பிரச்சினை இல்லை ,  இடதுசாரி  அமைப்புகள்தான் ராமர் பிறந்த தற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என கேட்டு பிரச்சனையை உண்டாக்கினர் என்றார். 

ஜே என் யூவின்  டிஎன்ஏ நாட்டிற்கு எதிரானது ,  அது திருத்தப்பட வேண்டிய ஒன்று இல்லையென்றால் மூடப்பட வேண்டிய ஒன்று ஏற்றார் ,  சோ எப்போதும் வெளிப்படையாக செய்வார் ,  ஆனால் நான் வெளிப்படையாக செய்யமாட்டேன் என்றார் , தமிழகத்தில் அரசியல் கட்சிகளுக்கு மரியாதை குறைந்துவிட்டது ,  காசு கொடுக்காமல் அவர்களால் கூட்டம் போட முடியவில்லை , லஞ்சத்தை  பொருத்தவரையில் திமுக அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை , தனக்கு முதன்முதலில்  எம்ஜிஆர் அவர்கள் நாத்திக அரசியலின் முதுகெலும்பை உடைத்தார், நாத்திக அரசியலை மாற்றினார், எனவே தனக்கு  முன்னிருக்கும்  பொறுப்பு  என்ன என்பது இப்போது நடிகர் ரஜினிக்கு தெரியும் என்று பேசினார். 

click me!