அந்த போலீஸ் யாருன்னு எனக்கு தெரியும்!:- குமுறும் ஸ்டாலின். சீசரின் மனைவி எப்படி இருக்க வேண்டும்:- ஜெட்லியின் அதிரடி...

 
Published : Dec 20, 2017, 08:38 PM ISTUpdated : Sep 19, 2018, 01:42 AM IST
அந்த போலீஸ் யாருன்னு எனக்கு தெரியும்!:- குமுறும் ஸ்டாலின். சீசரின் மனைவி எப்படி இருக்க வேண்டும்:- ஜெட்லியின் அதிரடி...

சுருக்கம்

Asianet news tamils today sensational breaking

காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு அலையும் வாழ்க்கை நம்முடையது. ஆயிரம் விஷயங்களில் பிஸியாக இருந்தாலும், அரசியலிலும் ஒரு கண் வைத்திருப்பது நம்மவர்களின் இயல்பு. அரசியல் நேயர்களுக்காக இதோ மின்னல் வேக செய்திகள்...

* ஆர்.கே.நகரில் எந்தெந்த போலீஸார் எல்லாம் பணப்பட்டுவாடாவுக்கு துணை நின்றனர் என்ற பட்டியல் கிடைத்துள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த ஆட்சி கவிழ்ந்து, தி.மு.க. ஆட்சி வந்ததும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும்.

- மு.க.ஸ்டாலின் (தி.மு.க. செயல்தலைவர்)

* குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் பி.ஜே.பி. வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள். ஆனால் இந்த வெற்றி தமிழகத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இங்கே பி.ஜே.பி.க்கு வாக்கு வங்கியே கிடையாது. 

- டி.டி.வி. தினகரன்.

* ஜெயலலிதாவுடன் கூட்டணியில் இருந்தபோது எங்களால் சில கருத்துக்களை கூற முடியவில்லை. வீட்டுக்கு ஒரு விவசாயியை உருவாக்குவது போன்ற பாலிசிகள் எங்களிடம் உள்ளன. 

- சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்)

* ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநில பொதுத்தேர்தல்களில் பி.ஜே.பி. வெல்லாது. 2019 லோக்சபா தேர்தல் மூலம் காங்கிரஸ் மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கும். 

- நாராயணசாமி (புதுவை முதல்வர்)

* நாங்கள் ஆர்.கே.நகர் தொகுதி மக்களுக்கு அதிகப்படியான பணத்தை பட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் வதந்தியை கிளப்புகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. 

- வேணுகோபால் (அ.தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர்)

* மோடியின் சொந்த மண்ணான குஜராத்திலேயே பி.ஜே.பி.யின் செல்வாக்கு குறைய துவங்கிவிட்டது. தம்பட்டம் அடித்துக் கொள்ளுமளவுக்கு ஒன்றும் அவர்கள் குஜராத்தில் வெல்லவில்லை. 

- திருமாவளவன் (தலைவர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி)

* குப்பையை ஆற்றின் பள்ளங்களில் கொட்டி, இறக்குமதி மணலால் மூட, வல்லுநர் குழுவை அனுமதிக்க வேண்டும்.

- தா.பாண்டியன் (இ.கம்யூ தேசியக்குழு உறுப்பினர்)

* தினகரனை ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் புறக்கணிப்பர். அவர் டெப்பாசீட் இழப்பார். ஜனநாயகத்தை மதிக்கும் எங்களுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். 

- ஜெயக்குமார் (மீன்வளத்துறை அமைச்சர்)

* குஜராத் தேர்தலின் முடிவானது பிரதமர் நரேந்திர மோடி மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கி உள்ளது. 

- ராகுல் காந்தி (காங்கிரஸ் தலைவர்)

* சட்டத்தை உருவாக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்று சொல்வது போல்தான் இது. 

- அருண் ஜெட்லி (மத்தியமைச்சர்)

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!