தமிழ்நாட்டில் தமிழை எல்லோரும் கட்டாயமாக கற்றுக்கொள்ள சட்டம் கொண்டு வரவேண்டும் !! அர்ஜுன் சம்பத் அதிரடி !!

By Selvanayagam PFirst Published Sep 28, 2019, 11:48 PM IST
Highlights

தமிழ் மொழியை  தமிழ்நாட்டில் அனைவரும்  கட்டாயம் கற்க வேண்டும் என்ற சட்டத்தை அதிமுக, திமுக இரு கட்சிகளும் தீவிரப்படுத்தவேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலையில் இயங்கி வரும் மதுபானக்கடைகளை அகற்றகோரி இந்து முன்னணி சார்பில் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய , அர்ஜூன் சம்பத், "ஸ்டாலின் ஆம்பூர், வாணியம்பாடி பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மாதர்ஷா பள்ளிகள், அரசு உதவி பெறுகின்ற உருது பள்ளிகளுக்கு சென்று இஸ்லாமியர்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கையை ஏற்று உருது படிப்பவர்கள் ஐந்து ஆண்டுகள் தமிழ் மொழியை படிப்பதற்கு விலக்கு அளித்துள்ளார்கள். 

இது தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் அளிக்கப்பட்ட அநீதி அதிமுக, திமுக இருகட்சிகளும் தமிழ் மொழியை தமிழ்நாட்டில் அனைவரும் கற்க வேண்டும் என்ற சட்டத்தை தீவிரப்படுத்தவேண்டும். இதற்கான வலிமையான கண்டனத்தை திமுகவிற்கு இந்து மக்கள் கட்சி தெரிவிப்பதாக அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் ஒன்றுதான் ஜாதி கொடுமைகளுக்கு தீர்வு என்று கூறி டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். திருமாவளவன் விரைவில் மதம் மாறப்போவதாக அறிவித்துள்ளார். எனவே அவர் வேண்டுமென்று தமிழர்கள் மீது களங்கம் கற்பிப்பதற்காக இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கின்றார் என அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

click me!