அரியர் தேர்வுகள்... அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு..!

By Thiraviaraj RMFirst Published May 25, 2021, 11:11 AM IST
Highlights

இந்த அறிவிப்பு அரியர் வைத்துள்ள 2011ஆம் ஆண்டுக்கு முந்தைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகள் குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அனைத்துப் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், பல்கலைக்கழகச் செயல்பாடுகள் குறித்து, காணொலி மூலம் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துரையாடினார். அந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

2011ஆம் ஆண்டுக்கு முன் படித்த கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுதும் வசதி வேண்டும் என நீண்ட காலமாக வேண்டுகோள் விடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அது குறித்த அறிவிப்பை தற்போது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகம் தவிர்த்த மற்ற அனைத்துப் பல்கலைக் கழகங்களுக்கான பட்டத் தேர்வுகள், அரியர், இறுதித் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்கி ஜூலை 15ஆம் தேதிக்குள் முடிவடையும். இதற்கான தேர்வு முடிவுகள் ஜூலை 30க்குள் வெளியிடப்படும்" என தெரிவித்தார்.

2011 ஆம் ஆண்டுக்கு முன்னர் படித்த கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வு ஜூன் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் ஜூன் 3ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரியர் வைத்துள்ள 2011ஆம் ஆண்டுக்கு முந்தைய மாணவர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

click me!