
தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு முதல்வரை உடனடியாக நியமிக்க வேண்டும் என திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்,
தமிழகத்தில் உள்ள அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பொறுப்பு முதல்வரையோ அல்லது புதிய முதல்வரையோ உடனடியாக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்ய உள்ள காவிரி உயர்மட்ட குழு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்க மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து சென்று ஆய்வு நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுககொண்டார்.