ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

Published : May 15, 2022, 11:40 AM ISTUpdated : May 15, 2022, 11:47 AM IST
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு

சுருக்கம்

ராஜ்ய சபா தேர்தல் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்,  

திமுக சார்பாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்..
 

2022 ஜூன் 10 அன்று நடைபெறவிருக்கும் ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், தி.மு.க. கூட்டணிக்கான 4 இடங்களில், இந்திய தேசிய காங்கிரசுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

3 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக

1. திரு. தஞ்சை சு. கல்யாணசுந்தரம் ;

2.திரு. கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், எம்.காம்., டி.சி.எம்;

3. திரு. இரா. கிரிராஜன், எம்.ஏ., பி.எல்., ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Mamata Banerjee: ராஜினமா செய்ய மறுக்கும் மம்தா பானர்ஜி.! மேற்கு வங்கத்தில் அடுத்து நடக்கபோவது இதுதான்.! அதிரடி திருப்பங்கள்.!
ADMK Clash: மீண்டும் அதிமுகவில் அதிரடி.! இபிஎஸ்க்கு எதிராக ஒன்றுதிரண்ட அதிமுகவினர்?! ஓபிஎஸ் போல் ஓரங்கட்டப்படும் எடப்பாடி பழனிச்சாமி.!