அமித்ஷா தலையில் ஐஸ் கட்டி... எடப்பாடியாரின் ராஜதந்திர அரசியல்... இப்படியே போனா அதிமுகவை அசைக்கவே முடியாதுங்க..

By Ezhilarasan BabuFirst Published Nov 18, 2020, 9:58 AM IST
Highlights

61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் II-ஆம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூபாய் 1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூபாய் 406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், 
 

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகைதர உள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அவரது வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அவரது வருகை பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியட்டுள்ளது. அதாவது தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி மு.பழனிசாமி அவர்கள் தலைமையில் மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா அவர்கள் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து, ரூபாய் 67,378 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: 

சென்னை, கலைவாணர் அரங்கில் 21.11.2020 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை புதிய நீர்த்தேக்கத் திட்டத்தினை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம்-ஐஐ மற்றும் பல்வேறு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் தலைமையேற்பார்கள். மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகையில் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டிலான புதிய நீர்த்தேக்கத் திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தும், ரூபாய் 61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் II-ஆம் கட்டம், கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ரூபாய் 1,620 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட சாலைத் திட்டம், கரூர் மாவட்டம், நஞ்சை புகலூரில் ரூபாய் 406 கோடி மதிப்பீட்டில் காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டம், ரூபாய் 309 கோடி மதிப்பீட்டில் சென்னை வர்த்தக மையம் விரிவுபடுத்தும் திட்டம், 

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் திட்டங்களான வல்லூரில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் பெட்ரோலியம் முனையம், அமுல்லைவாயலில் ரூபாய் 1,400 கோடி மதிப்பீட்டில்  Lube Plant அமைத்தல் மற்றும் காமராஜர் துறைமுகத்தில் ரூபாய் 900 கோடி மதிப்பீட்டில் புதிய இறங்கு தளம் அமைக்கும் திட்டம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி விழாப் பேருரையாற்றுவார்கள். இவ்விழாவில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்புரையாற்றுவார்கள். மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் முன்னிலை வகிப்பார்கள். மேலும், இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதி-புது தில்லி, வாரியத் தலைவர்கள் மற்றும் சீர்மிகு பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம், இ.ஆ.ப., அவர்கள் வரவேற்புரையாற்றுவார்கள். தொழில் துறை முதன்மைச் செயலாளர் திரு.என்.முருகானந்தம், இ.ஆ.ப., அவர்கள் நன்றியுரையாற்றுவார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!