இந்துக்கள் அல்லாதோரை நாட்டைவிட்டே விரட்டுவோம் !! அமித்ஷாவின் அதிரடி பேச்சு !!

By Selvanayagam PFirst Published Apr 12, 2019, 9:11 PM IST
Highlights

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பாஜக தலைவர் அமித்ஷா இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களைத் தவிர இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக புகுந்த அனைவரையும் நாங்கள்  நாட்டைவிட்டே வெளியேற்றுவோம் என தெரிவித்தார்..
 

மேற்கு வங்கம் மாநிலம் ராய்கஞ்ச் பகுதியில் நடைபெற்ற  பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்ற  பாஜக தேசிய தலைவர் அமித்ஷா ,மேற்கு வங்கத்தில் தேசிய குடிமக்கள் பதிவு நிச்சயமாக அமல்படுத்தப்படும் என்றும்,  சட்டவிரோதமான குடியேறிகள் எல்லாம் கரையான்களை போன்றவர்கள். ஏழைகளுக்கு போகவேண்டிய உணவுதானியங்களை குடியேறிகள் உண்கின்றனர். நமக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகளை அவர்கள் எடுத்துக்கொள்கின்றனர் என்றும் குற்றம்சாட்டினர்..

சிறுபான்மையினரை சமாதானம் செய்யும் அரசியலையே மம்தா பானர்ஜி தலைமையிலான திருணமுல் காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தின் 23 மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிய பிறகு மே 23ஆம் தேதி முதல் திரிணமுல் காங்கிரஸின் வீழ்ச்சி தொடங்கும் என அமித்ஷா குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவு அமல்படுத்தப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம். இந்துக்கள், பவுத்தர்கள், சீக்கியர்களைத் தவிர நாட்டுக்குள் சட்டவிரோதமாக புகுந்த அனைவரையும் நாங்கள் வெளியேற்றுவோம் என அமித்ஷா அதிரடியாக அறிவித்தார்..

அனைத்து இந்து மற்றும் பவுத்த அகதிகளை கண்டுபிடித்து அவர்களுக்கு குடியுரிமை வழங்கி அவர்களை இந்நாட்டு மக்களாக்குவோம் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.
 

click me!