அமெரிக்காவே இரங்கல் தெரிவித்தது! கருணாநிதியின் புகழுக்கு இதுவே சாட்சி..

First Published Aug 7, 2018, 7:38 PM IST
Highlights

பலமுறை நாடாளுமன்ற தேர்விற்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் அதனை தவிர்த்து வந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தின் அரசியல் களத்தில் மாபெரும் தலைவனாய் விளங்கிவந்த கலைஞரின் மறைவிற்கு தற்பொழுது அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது.

கடந்த 27 ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் திடீர் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார். 
அதன்பின், அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை  அடுத்து கடந்த நான்கு நாட்களாக மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்து வருகிறார் தலைவர் கருணாநிதி. நேற்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதி அவர்களின் உடல் கவலைக்கிடமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 24 மணி நேரத்திற்கு பின் தான் அவருடைய உடல் நலத்தினைப் பற்றி கூறமுடியும் என்று தெரிவித்திருந்தனர். ஆனால், அவர்கள் கூறிய 24  மணி நேரம் முடிவதற்கு 20  நிமிடங்கள் முன்பாகவே அவருடைய உயிர் பிரிந்தது.
அதனால் தமிழகமே கண்ணீரில் மூழ்கியுள்ளது.

பலமுறை நாடாளுமன்ற தேர்விற்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்தும் அதனை தவிர்த்து வந்தவர் கலைஞர் கருணாநிதி. தமிழகத்தின் அரசியல் களத்தில் மாபெரும் தலைவனாய் விளங்கிவந்த கலைஞரின் மறைவிற்கு தற்பொழுது அமெரிக்க இரங்கல் தெரிவித்துள்ளது. ஒரு மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க இரங்கல் தெரிவித்தது கலைஞர் கருணாநிதிக்கு கிடைக்கும் மிகப்பெரிய கவுரவம் ஆகும். 

click me!