டி.டி.வி.தினகரன் பெயரை நீக்கி திருத்தம்... சசிகலாவுக்கு அதிமுக எதிர்ப்பு..!

Published : Jul 30, 2021, 04:59 PM IST
டி.டி.வி.தினகரன் பெயரை நீக்கி திருத்தம்... சசிகலாவுக்கு அதிமுக எதிர்ப்பு..!

சுருக்கம்

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம்.   

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம். 

அதிமுக பொதுக்குழு செல்லாது என சசிகலா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சென்ற பின் 2017 செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழு கூடியது. பொதுக்குழுவில் சசிகலா, தினகரனை பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர் பதவிகளில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தங்களை நீக்கிய அதிமுக பொதுக்குழு செல்லாது என அற்விக்கக்கோரி தினகரனும், சசிகலாவும் மனு தாக்கல் செய்தனர். 

இந்நிலையில், இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா மனுவை விசாரணைக்கு எடுக்க அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த வழக்கிலிருந்து டி.டி.வி.தினகரன் விலகியதால் அவரது பெயரை நீக்கி திருத்த மனு தாக்கல் செய்தார் சசிகலா.

PREV
click me!

Recommended Stories

அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்
TVK Cabinet: விஜய் அமைச்சரவை பட்டியல்: நிதி அமைச்சர் செங்கோட்டையன்! ஆதவ் அர்ஜுனா, ஆனந்துக்கு என்ன துறை?