அதிமுக முக்கிய நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்..!

Published : Apr 14, 2022, 03:21 PM ISTUpdated : Apr 14, 2022, 03:22 PM IST
அதிமுக முக்கிய நிர்வாகிகள் அதிரடி நீக்கம்.. சாட்டையை சுழற்றிய ஓபிஎஸ், இபிஎஸ்..!

சுருக்கம்

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்கண்டவர்கள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளனர்.

கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கீழ்கண்டவர்கள் இன்று முதல் நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் 

திண்டுக்கல் மேற்கு மாவட்டம், கழகத்தைச் சேர்ந்த வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மீது, திமுகவிற்கு ஆதரவாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களான, 

* சந்திரா சவடமுத்து (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர், கிழக்கு ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர்) 

* சத்தியபிரியா பாலமுருகன் (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 4-வது வார்டு உறுப்பினர் ) 

* பார்த்திபன் (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 5-வது வார்டு உறுப்பினர் கிழக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்).

* காளிமுத்து, (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 6-வது வார்டு உறுப்பினர், கிழக்கு ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலாளர்)

* கி. ஜானகி, (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 8-வது வார்டு உறுப்பினர்) 

* புஷ்பவள்ளி (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 9-வது வார்டு உறுப்பினர், மேற்கு ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்)

* தேவசாகயம், (வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியக் குழு 14-வது வார்டு உறுப்பினர், மேற்கு ஒன்றிய சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்) 

இவர்களுக்கு உடந்தையாக செயல்பட்ட 

* சவடமுத்து (வேடசந்தூர் கிழக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் ) 

* பாலமுருகன், (வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணிச் செயலாளர்) ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் மக்கள் சந்திப்பு... கரூர்- ஈரோடு கூட்டத்திற்கு இடையே இவ்வளவு மாற்றங்களா..?
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!