நிஜ தலைவர்களாலேயே அதிமுக அசைக்க முடியல.. நிழல் தலைவர் எல்லாம் எந்த மூலைக்கு.. சீறிய CV.சண்முகம்.!

By vinoth kumarFirst Published Oct 17, 2021, 7:37 PM IST
Highlights

சசிகலா என்ன நாடகம் நடத்தினாலும் எந்த உருவத்தில் வந்தாலும் இன்னொருமுறை அதிமுக இயக்கம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. சசிகலாவால் தொடங்கபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையே காப்பாற்ற முடியாதவர் அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பதா? 

ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக இயக்கத்தைத் துளியும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது என  முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

சென்னை தி.நகர் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதனையடுத்து, எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, அதிமுக பொன்விழா கல்வெட்டையும் திறந்து வைத்தார். அந்த கல்வெட்டில் கழக பொதுச்செயலாளர் சசிகலா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில், விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்;- அதிமுகவில் 2-ம் கட்டத் தலைவர்களாக இருந்த நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற நிஜத் தலைவர்கள் தனிக் கட்சித் தொடங்கி, அதிமுகவை அசைத்துப் பார்க்க முயற்சித்து தோல்வியைத் தழுவினர். நிஜத் தலைவர்களாலேயே முடியாததை நிழல் தலைவர்களால் செய்துவிட முடியாது. 

சசிகலா என்ன நாடகம் நடத்தினாலும் எந்த உருவத்தில் வந்தாலும் இன்னொருமுறை அதிமுக இயக்கம் ஏமாறுவதற்குத் தயாராக இல்லை. சசிகலாவால் தொடங்கபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையே காப்பாற்ற முடியாதவர் அதிமுகவைக் கைப்பற்ற நினைப்பதா? எம்ஜிஆர் உருவாக்கித் தந்த இரட்டை இலைச் சின்னத்தை பெற ஒன்றரை கோடி தொண்டர்கள் இருக்கையில், எங்களுக்கு சசிகலா தேவையில்லை. ஓராயிரம் சசிகலா வந்தாலும் அதிமுக இயக்கத்தைத் துளியும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாது. தொண்டர்கள் அவரை நம்பி ஏமாற மாட்டார்கள் என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார்.

click me!