அதிமுகவை காட்டிக் கொடுத்தவர்கள் யாரும் விளங்கமாட்டார்கள்... அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேச பேச்சு..!

By vinoth kumarFirst Published Mar 30, 2021, 7:49 PM IST
Highlights

நம்ப வைத்து ஏமாற்றிவர்கள், நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் என அனைவரையும் பார்த்து விட்டேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். 

நம்ப வைத்து ஏமாற்றிவர்கள், நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் என அனைவரையும் பார்த்து விட்டேன் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியுள்ளார். 

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ராஜேந்திர பாலாஜி கூட்டத்தில் பேசுகையில்;- அதிமுக ஆட்சிதான் தொல்லை இல்லாத ஆட்சி. பிறரை கெடுக்காத ஆட்சி, கட்டப்பஞ்சாயத்து செய்யாத ஆட்சி, பெண்களை கிண்டல் கேலி செய்யாத ஆட்சி. இந்த ஆட்சி எடப்பாடி மீண்டும் முதலமைச்சர் ஆக வேண்டும்.

முதலமைச்சரின் தாயாரை இழிவாக பேசுகின்றனர். நான் எவ்வளவு வேகத்தில் பேசினாலும் பெண்களை இழிவாக பேசமாட்டேன். பிறரை துன்புறுத்தி அதில் இன்பம் அடையும் கட்சி திமுக. அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள் நிர்வாகிகளை அசிங்கப்படுத்த நினைக்கிறார்கள் இவர்களுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தமிழகத்தில் தலை எடுக்க விடாமல் செய்ய வேண்டும். எடப்பாடி ஒரு அருமையான மனிதாபிமானம் மிக்க முதலமைச்சர். முதலமைச்சர் கண் கலங்குவதை பார்த்து நானும் கண் கலங்கினேன்.

ஸ்டாலின் ஆ.ராசாவை தூண்டி விட்டு பேச வைத்துள்ளார். 10 ஆண்டுகளாக அமைச்சராக இருந்து நல்லவர்களையும் கெட்டவர்களையும் பார்த்துவிட்டேன். நம்ப வைத்து ஏமாற்றிவர்கள், நம்ப வைத்து கழுத்தை அறுத்தவர்கள் என அனைவரையும் பார்த்து விட்டேன். அதிமுக கொடியை 14 வயதில் பிடித்தேன். தற்போதுவரை நான் அதை விடவே இல்லை. என்னை பதவியை விட்டு இறக்கியபோதுகூட, நான் தலைமை சொல்படியே கேட்டு நடந்தேன். அதிமுகவை காட்டிக் கொடுத்தவர்கள் யாரும் விளங்கியது இல்லை. ஏமாற்றுக் காரர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். 

click me!