மாப்ளே! மாமா!ன்னு தி.மு.க.வினரை உறவு கொண்டாடிய அ.தி.மு.க. அமைச்சரும், எம்.பியும்: ஏற்கனவே பத்திக்கிட்டு எரியும் பொள்ளாச்சியில் புது டீசல் மழை!

By Vishnu PriyaFirst Published Apr 10, 2019, 2:10 PM IST
Highlights

’சுயேட்சையா நின்னாலும் ஜெயிப்பார்டா எங்காளு!’ அ.தி.மு.க.வில் வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பாக, பொள்ளாச்சியின் சிட்டிங் எம்.பி.யான மகேந்திரனின் ஆதரவு கைத்தடிகள் இப்படித்தான் சவுண்டு விட்டார்கள். அவர்கள் சொல்லியது உண்மையும்தான். ஏனென்றால், கடந்த முறை பிரசாரத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், ஐந்து வருடங்களாக பல  எம்.பி.க்கள் வெறுமனே வாயால் வடைசுட்ட நிலையில், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி சாதித்தவர் மகேந்திரன். 
 

’சுயேட்சையா நின்னாலும் ஜெயிப்பார்டா எங்காளு!’ அ.தி.மு.க.வில் வேட்பாளர் அறிவிக்கப்படும் முன்பாக, பொள்ளாச்சியின் சிட்டிங் எம்.பி.யான மகேந்திரனின் ஆதரவு கைத்தடிகள் இப்படித்தான் சவுண்டு விட்டார்கள். அவர்கள் சொல்லியது உண்மையும்தான். ஏனென்றால், கடந்த முறை பிரசாரத்தின் உறுதிமொழிகளை நிறைவேற்றாமல், ஐந்து வருடங்களாக பல  எம்.பி.க்கள் வெறுமனே வாயால் வடைசுட்ட நிலையில், சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி சாதித்தவர் மகேந்திரன். 

இதனால் தொகுதியில் மனிதருக்கு செம்ம செல்வாக்கு. அதனால்தான் கட்சி சீட் கொடுக்காவிட்டாலும் கூட, சுயேட்சையாக நின்னாலே ஜெயித்துவிடுவார் மகேந்திரன்! என்று கெத்து காட்டினர். கடைசியில் கட்சி இவருக்குதான் சீட்டும் கொடுத்தது. ஆக, ஏக பரபரப்பாக  பிரசாரத்தில் இருக்கிறார் மகேந்திரன். 

இச்சூழலில் சமீபத்தில் உடுமலைப்பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனும், மகேந்திரனும் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். ஒரு பாயின்டில் வண்டியை நிறுத்திவிட்டு பேசும்போது, கீழே கூடியிருந்த கூட்டத்தில் சில ஆண்கள், ‘அமைச்சரே, மைக்கை எங்க மாமா மகேந்திரனிடம் கொடுங்க.’ என்று சவுண்டு விட்டுள்ளனர். மைக்கை வாங்கிய மகேந்திரன் ‘சொல்லுங்க  மாப்ளே!’ என்று உறவு சொல்லி அழைத்துள்ளார். 

உடனே குஷியாகி போன அவர்கள், ‘ஓவர் வெயிலா இருக்குது. அதனால நம்ம உடுமலைப்பேட்டை டவுனுக்கு நட்ட நடுவுல ஒரு தொட்டிய கட்டி தண்ணீர் தெறந்து விடுங்கோ. நாங்கள்லாம் ஜாலியா நீச்சலடிச்சுட்டு கெடப்போம். பாலம், தண்ணீர் டேங் கட்டுறதுல நீங்கதான் கில்லாடி ஆச்சே! எஸ்டிமேட்டு துல்லியமா தெரியுமே உங்களுக்கு.’ என்று வம்பிழுக்க, உடனே மைக்கை வாங்கிய அமைச்சர் ராதாகிருஷ்ணன், “மாப்ளைகளா நீங்க தி.மு.க. கட்சியாளுங்கன்னு எங்களுக்கு தெரியும். ஓவர் ரவுசு வுடாதீங்கோ.  உங்க கட்சி வேட்பாளர் சண்முகசுந்தரத்தை தொகுதியில ஒருத்தனுக்கும் தெரியலை. அதனால அவர் கூட பிரசாரத்துக்கு போக சங்கடப்பட்டுட்டு, இங்கிட்டு வந்து ரவுசு பண்றீங்களா? வேணும்னா கட்சியில சேருங்க, இலவசமா கரைவேஷ்டி தர்றோம்.” என்று கேட்டை போட்டிருக்கிறார். 

ரவுசு விட்ட தலைகள் கூட்டத்தில் எஸ்கேப் ஆகிவிட்டனர். கலகலப்பாக நடந்த இந்த சம்பாஷனைகளை அமைச்சருக்கு வேண்டாத கோஷ்டியினர் தலைமை வரை கொண்டு போயி, “ஏற்கனவே பொள்ளாச்சி பாலியல் பிரச்னையால நம்ம கட்சிக்கு நிலைமை சிக்கலா இருக்குது. இதுக்கு நடுவுல அமைச்சர் ராதாவும், எம்.பி.யும் தி.மு.க.காரங்களை உறவு சொல்லி கொண்டாடிட்டு இருக்கிறாங்க.” என்றார்களாம். 

முழுமையாக விசாரித்த எடப்பாடியார்...”கொங்கு பகுதியில இப்படி மாமா! மாப்ளை!ன்னு உறவு சொல்லி பேசுறது வழக்கமான ஒண்ணுதான். என்னதான் ரத்த சம்பந்தமா இருந்தாலுமே கூட அரசியல்னு வந்துட்டா எதிரெதிரா நின்னு மோதுறதும்  இயல்பு. அதனால இதுல ஒண்ணும் தப்பில்லை. போயி ஆகுற வேலையை பாருங்க.” என்று நோஸ்கட் கொடுத்து அனுப்பினாராம். 

ஆனால் இந்த விஷயத்தில் ‘தொகுதியில் ஒருத்தனுக்கும் தெரியாத தி.மு.க. வேட்பாளர்.’ என்று அமைச்சரால்  பொது இடத்தில் அசிங்கப்படுத்தப்பட்டு விட்டதால் தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரம் பெரும் மன உளைச்சலில் கிடக்கிறாராம்.

click me!