திருந்தவே மாட்டீங்களாடா.. புத்தியில்லாத பசங்களா.. சீமான் பிறந்த நாளில் கொந்தளித்த நடிகை விஜயலட்சுமி..!

By Thiraviaraj RMFirst Published Nov 8, 2021, 7:12 PM IST
Highlights

ஏண்டா நீங்க திருந்தவே மாட்டீங்களாடா? இந்த ஜென்மத்தில் திருந்தவே மாட்டீங்களடா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. எதுக்காக அந்த தலைவர் நல்லா இருக்கணும் என்பது புரியவில்லை. அவர் ஏற்கனவே நன்றாகத்தான் இருக்கிறார். அடுத்தவர்கள் வாழ்க்கையை எப்படி சீரழிப்பது என்பதை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். 

சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி குற்றம்சாட்டி வருகிறார். சீமானுக்கு எதிராக பல வீடியோக்களையும் தனது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் சீமானின் பிறந்த நாளான இன்றும் ஒரு வீடியோவை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

அந்த வீடியோவில், ‘’ஒரு பொண்ணு ஒரு வருஷமா துடித்து துடித்து தன்னோட கதையை சொல்லி படாத பாடுபட்டு சாகக் கிடந்தவளை பிழைக்க வைத்து கூட்டி வந்த ரஜினிசார் மாதிரி பெருந்தலைவருடன் அந்த பெண்ணை இணைத்து அசிங்கமாக பேசி துன்படுத்தி ஊரைவிட்டு ஓட்டிவிட்டீர்கள். இப்படி ஒரு சம்பவம் ஒரு வருடமாக நடந்த பிறகும், சீமான் அவர்கள் நல்லா இருக்கணும். அவர் பிறந்த நாளை கொண்டாடி நல்லா இருக்கணும் என்று வாழ்த்து சொல்கிறார்கள். 

ஏண்டா நீங்க திருந்தவே மாட்டீங்களாடா? இந்த ஜென்மத்தில் திருந்தவே மாட்டீங்களடா என்றுதான் கேட்கத் தோன்றுகிறது. எதுக்காக அந்த தலைவர் நல்லா இருக்கணும் என்பது புரியவில்லை. அவர் ஏற்கனவே நன்றாகத்தான் இருக்கிறார். அடுத்தவர்கள் வாழ்க்கையை எப்படி சீரழிப்பது என்பதை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு பொருளை எப்படி பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்து விட்டு பக்கத்து மாநிலத்தில் விழுந்து நாசமாக போகட்டும் என கற்றுக்கொள்ளலாம். ஆதாரமே இல்லை என்றும் எனக்கு அவங்க யாருன்னே தெரியாது என்றும் மாஸ்டர் பிளானை எப்படி போடுவது என எல்லாவற்றையும் சீமானிடம் கற்றுக்கொள்ளலாம். 

420 வேலைகளுக்கு எல்லாம் மாஸ்டர் என சொல்லப்படுகிற சீமானுக்கு பிறந்த  நாள் வாழ்த்துகளை கண்டிப்பாக சொல்ல வேண்டும்தான். மானம், மரியாதை, சூடு, சொரணை எதுவுமே இல்லாமல் எப்படி வாழ வேண்டும் என்பதை கண்டுபிடித்தவர் சீமான். எதிரில் இருக்கிறவன் செத்தே போனாலும் நாம எப்படி அடித்து வாழ வேண்டும் என்பதை கண்டிப்பாக சீமானிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக வாழ்த்துக்களை சொல்ல வேண்டும். 


 
ஏதோ பாமர மக்கள்தான் இப்படி வாழ்த்துக்கள் சொல்கிறார்கள் என்றால் சில படித்த முட்டாள்களும்கூட கூட சீமானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்கிறார்கள். சீமான் அலுவலகத்தில் எனக்காக முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என அறிவித்தார்கள். அங்கே நியாயம் எதுவும் கிடைக்காது என்பதால் அந்த போராட்டத்தை நடத்த வேண்டாம் எனச் சொன்னேன். சீமானுக்கு மனசாட்சியே கிடையாது. என்னைப் பொறுத்தவரை சீமான் மாதிரி 420களை நம்பாதீர்கள் என எச்சரிக்கை விடத்தான் முடியும். 

வாழ்த்துகள் தலைவா! முட்டாள்களுக்கு மத்தியில் பிறந்த நாள் கொண்டாட்டம். சீமான் இருக்கும் இடத்தில் இனி இருக்கமாட்டேன் என்பதற்காகத்தான் கர்நாடகாவுக்கு வந்துவிட்டேன். எங்கம்மா இறந்து விட்டதால்தான் நான் கொஞ்ச நாட்களாக வீடியோ போடவில்லை. சீமானுக்கு வாழ்த்துச் சொன்ன புத்தியில்லாதவர்களை நினைத்து நான் ரொம்ப பாவப்படுகிறேன். கொஞ்ச நாளில் ஆட்டை அறுப்பதைப்போல உங்களையும் அறுப்பார்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

click me!