40 தொகுதியிலும் தனித்து களமிறங்க போறோம்! நடிகர் சரத்குமார் அதிரடி அறிவுப்பு!

Published : Mar 06, 2019, 06:24 PM IST
40 தொகுதியிலும் தனித்து களமிறங்க போறோம்! நடிகர் சரத்குமார் அதிரடி அறிவுப்பு!

சுருக்கம்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி, மற்றும் எதிர் கட்சிகளான அதிமுக, மற்றும் திமுகவுடன் கூட்டணியில்,  உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டன.    

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கட்சி, மற்றும் எதிர் கட்சிகளான அதிமுக, மற்றும் திமுகவுடன் கூட்டணியில்,  உள்ள கட்சிகளுக்கு கிட்டத்தட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுவிட்டன.  

இந்த நிலையில்,  இரு கூட்டணியிலும் இணையாத கட்சிகள் மூன்றாவது கூட்டணியிலோ அல்லது தனித்து நிற்க வேண்டிய நிலையில் உருவாகியுள்ளது.

தற்போது பிரபல அரசியல்வாதியும், நடிகருமான சரத்குமார் 40 தொகுதிகளிலும் 'அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி' தனித்து போட்டியிடும் என அதிரடியாக அறிவித்துள்ளார். 

சமீபத்தில் சரத்குமார், விஜயகாந்தை நேரில் சென்று சந்தித்ததால் இருவரும் இணைந்து கூட்டணி வைக்க வாய்ப்பு இருந்ததாக கட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது. ஆனால் விஜய்காந்த் அதிமுக, திமுக என மாறி மாறி பேசிவருவதால் சரத்குமார் தனித்து போட்டியிட முடிவு செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இவரை போலவே,  டிடிவி தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளும் தனித்து போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Vijay Sangeetha: அதிரடி ட்விஸ்ட்.! சமரசத்தில் முடிந்த விஜய் – சங்கீதா விவகாரம்?! குழந்தைகளுக்காக குப்பையில் தூக்கி வீசப்பட்ட "ஈகோ"
கர்த்தரே... எங்கள் ட்ரம்புக்கு பலத்தை கொடுங்கள்..! ஈரான் போருக்காக ஒயிட் ஹஸில் ஜெபித்த மத போதகர்கள்..!