தொகுதிக்குள்ள போன விரட்டுறாய்ங்க… ஏன்டா ஜெயிச்சோமுன்னு இருக்கு ? புலம்பித் தள்ளும் புலிப்படைத் தலைவர்….

 
Published : Apr 24, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
தொகுதிக்குள்ள போன விரட்டுறாய்ங்க… ஏன்டா ஜெயிச்சோமுன்னு இருக்கு ? புலம்பித் தள்ளும் புலிப்படைத் தலைவர்….

சுருக்கம்

Actor karunas talk about his contituency

தொகுதிக்குள்ள பாதுகாப்பு இல்ல…உள்ள போன விரட்டுராய்ங்க…தேர்தலில் நின்னு தெரிந்தோ, தெரியாமலோ ஜெயிச்சுட்டேன்…இப்ப ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு என கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் புலம்பித் தள்ளியுள்ளார்.

திருவாடானைத் தொகுதியில் குடிநீர் திட்டம் செயல்படுத்துவது குறித்து ராமநாதபுரம் ஆட்சியர் நடராஜனை , தொகுதி எம்எல்ஏ கருணாஸ் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்நது செய்தியாளர்களிடம் பேசிய  அவர், எந்த ஒரு பிரச்சனையிலும் அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை, தொகுதிக்கு எதுவும் செய்யமுடியவில்லை என புலம்பிய அவர், இதனால் தொகுதிக்குள் போக முடியவில்லை என்றார்.

அப்படியானால் உங்கள் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யலாமே என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு  அவர், எந்தப் பணியிம் செய்ய முடியாமல் அந்த பதவி எதுக்கு என சட்டப் போரவையில்கூட பேசி விட்டேன், தெரிந்தோ, தெரியாமலோ ஜெயித்து விட்டேன், இப்ப ஏன்டா ஜெயிச்சோம்னு இருக்கு என புலம்பினார்.

தொகுதிக்குள் எனக்கு பாதுகாப்பே இல்லை, உள்ளே வந்தால் 4 பேரை நிறுத்தி இவர்களே கல் எறிகிறார்கள், யார் என்று கேட்டால் அவர்கள் வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள் என கூறுகிறார்கள். இதற்கொல்லாம் காரணம் அமைச்சர் மணிகண்டன்தான் எனவும் கருணாஸ் தெரிவித்தார்.

இவரால்தான் தான்  தொகுதிப் பக்கமே  வர முடியவில்லை எனவும் கருணால்ஸ் நிருபர்களிடம் புலம்பித் தள்ளினார்.

PREV
click me!

Recommended Stories

இந்த மூன்று நாடுகளின் ஜனாதிபதிகளைக் கொல்ல துடிக்கும் அமெரிக்கா..? டிரம்பின் சதித் திட்டம்..!
அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?