ரூ.10 கோடி விளம்பரப் பாக்கியை கட்டினால் மட்டுமே சீட்டு... அதிமுக நிர்வாகிகளுக்கு இ.பி.எஸ்- ஓ.பிஎஸ் வேட்டு..!

By Thiraviaraj RMFirst Published Mar 1, 2021, 5:11 PM IST
Highlights

ரூ.10 கோடிக்கும் மேல் பாக்கி வைத்திருக்கிறார்களாம் நிர்வாகிகள். இந்த தகவல் ஓ.பி.எஸ்- எடப்பாடி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பேரில் அதிமுக சார்பாக புரட்சித் தலைவி நமது அம்மா நாளிதழில் இயங்கி வருகிறது. கட்சி சார்ந்த நடவடிக்கைகள், அறிவிப்புகள், கொள்கைகள் ஆகியவற்றுடன் எதிர்கட்சிகளின் செயல்பாடுகளை தோலுரித்து, கடும் விமர்சனம் செய்து வருவதால் மீடியாக்கள், இணையதள செய்தி நிறுவனங்கள் அனைத்தும் நமது அம்மா நாளிதழில் வெளியாகும் விமர்சனங்களை மேற்கோள் காட்டி நாள்தோறும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. 

அந்த நாளேட்டில், அதிமுக சார்ந்த கட்சி விழாக்கள், தலைவர்களின் பிறந்த நாட்கள், பொறுப்பேற்பு நிகழ்ச்சிகளின் போது தங்களது விளம்பரங்களை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் வெளியிட்டு வந்துள்ளனர். ஆனால், தங்களது கட்சி சார்பில் வெளியாகும், நாளிதழில் தாங்கள் கொடுத்த விளம்பரங்களுக்கான கட்டணங்களை கட்சி நிர்வாகிகள் சரியாக செலுத்துவதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

ரூ.10 கோடிக்கும் மேல் பாக்கி வைத்திருக்கிறார்களாம் நிர்வாகிகள். இந்த தகவல் ஓ.பி.எஸ்- எடப்பாடி ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும்,’’இந்த விளம்பரப்பாக்கி தொகையை முழுமையாக கொடுப்பவர்களுக்கு மட்டுமே சீட்டும், பதவியும் கொடுக்கப்படும். நமது இதழையே இப்படி ஏமாற்றுவார்களா?  இவர்களை நம்பியெல்லாம் எப்படி சீட்டும், பதவியும் கொடுப்பது? ஆகையால் பாக்கி வைத்திருப்பவர்களிடம் கறாராக நடந்து கொள்ளுங்கள்’’என உத்தரவிட்டு இருப்பதாக தகவல். 

click me!