அ.தி.மு.க. எம்.எல்.ஏ.பன்னீர்செல்வத்துக்கு தர்ம அடி... காலில் விழுவது போல நடித்து செம காட்டு...

First Published Jan 22, 2018, 4:53 PM IST
Highlights
A woman slaps kalasapakkam mla panneerselvam


திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.பன்னீர்செல்வத்த்தை தர்ம அடி அடித்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் காலில் விழுவது போல் நடித்து அவரது கன்னத்தில் அறைந்த வசந்தமணி என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகான கடந்த ஒரு வருடமாக தம்ழகத்தில் அதிமுக MLA க்களின் செயல்பாடுகளால் பொதுமக்கள் மட்டுமல்ல அதிமுக உண்மையான தொண்டர்களே செமகடுப்பில் இருப்பது அன்றாடம் தெரிகிறது. வேலையில்லாத் திண்டாட்டம், வறட்சியால் விவசாயிகள் பாதிப்பு, போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் என அனைத்து தரப்பு மக்களும் ஏதோவொரு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எம்.எல்.ஏக்களின் ஊதியத்தை 55 ஆயிரத்திலிருந்து 1 லட்சத்து 5 ஆயிரமாக அதாவது சதவிகிதம்  உயர்த்தியதால் மக்கள் செம கடுப்பில் இருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசாங்க காசில் ஆட்சியாளர்கள் கொண்டாடுவது இன்னும் ஒருபடி கோபத்தில் இருக்கிறார்கள். இதெல்லாம் போதாது என்று தற்போது போக்குவரத்து கட்டண உயர்வு என்று மக்கள் மீது மொத்த சுமையையும் இறக்கி வைத்துவிட்டு வேடிக்கை பார்க்கின்றது மக்களின் மனநிலையை மொத்தமாக மாற்றிவிட்டனர். இப்படி ஆட்சியாளர்கள் மீதும் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், ஆளுங்கட்சியான அதிமுக எம்.எல்.ஏவை ஒரு பெண் தர்ம அடி அடித்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ வி.பன்னீர்செல்வம். போளூரில் திருமண விழாவில் எம்.எல்.ஏ பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். அப்போது, அவரது காலில் விழுவது போல் நடித்து வசந்தமணி என்ற நபர், எம்.எல்.ஏ பன்னீர்செல்வத்தின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏவை பொது இடத்தில் ஒருவர் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போளூரில் உள்ள பன்னீர்செல்வத்தின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளது. 

அரசின் மீதான வெறுப்பால், எம்.எல்.ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டது அப்பட்டமாக தெரிகிறது. தொகுதி தொடர்பான கோரிக்கையை நிறைவேற்றாததால் தொகுதி மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பின் வெளிப்பாடாக இது தெரிகிறது.

click me!