அடித்து தூக்கும் ஓபிஎஸ்..! - வேலூர் தூத்துக்குடி பெரம்பலூர் எம்பிக்கள் ஐக்கியம்

Asianet News Tamil  
Published : Feb 12, 2017, 11:13 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
அடித்து தூக்கும் ஓபிஎஸ்..! - வேலூர் தூத்துக்குடி பெரம்பலூர் எம்பிக்கள் ஐக்கியம்

சுருக்கம்

ஏற்கெனவே 5 எம்பிக்கள் ஒபிஎஸ்சிடம் ஐக்கியமாகி உள்ள நிலையில் மேலும் 2 எம்பிக்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மாநிலங்களவை எம்.பி மைத்ரேயன், நாமக்கல் மக்களைவை உறுப்பினர் பி.ஆர் சுந்தரம், கிருஷ்ணகிரி அசோக் குமார், திருப்பூர் சத்யபாமா, திருவண்ணாமலை வனரோஜா என 5 எம்பிக்கள் இதுவரை ஆத்ரவு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று வேலூர் எம்.பி செங்குட்டுவன், தூத்துக்குடி ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் , எம்பியுமான மருதுராஜா  ஆகியோர் ஓபிஎஸ்சை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் ஒபிஎஸ்சுக்கு ஆதரவளித்த எம்பிக்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. எம்எல்ஏக்களை பிடித்து சிறை வைத்துள்ள சசிகலா தரப்பு ஒட்டுமொத்த எம்பிக்களையும் கோட்டை விட்டு விட்டார்கள் என்றே சொல்லலாம்.

மொத்தமுள்ள 49 +1 (சசிகலா புஷ்பா) சேர்த்து 50 பேர் அதிமுக எம்பிக்களாக உள்ளனர்.

இதில் 30க்கும் மேற்பட்டோர் ஒபிஎஸ்சுடன் செல்வதை தடுக்கவே முடியாது என்கின்றனர் அதிமுக எம்பிக்களின் மனநிலையை நன்கு அறிந்தவர்கள்.

உட்கார்ந்த இடத்திலேயே அடித்து தூக்கி கொண்டிருக்கிறார் ஓபிஎஸ் என்றால் அது மிகையல்ல

PREV
click me!

Recommended Stories

Premalatha Vijayakanth: அட்ரா சக்க... கூட்டணியில் இருந்தாலும் திமுக ஆட்சியின் தவறை சுட்டிக்காட்டிய பிரேமலதா!
திமுக ஆட்சியில் 1 லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கு! - ஆதவ் அர்ஜுனா பகீர் குற்றச்சாட்டு