அரசின் 5 திட்டங்கள் கையெழுத்து : ஓ.பி.எஸ் அணியினர் வரவேற்பு

 
Published : Feb 20, 2017, 07:37 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
அரசின் 5 திட்டங்கள் கையெழுத்து : ஓ.பி.எஸ் அணியினர் வரவேற்பு

சுருக்கம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்ட 5 திட்டங்களுக்கும் ஓ.பி.எஸ். அணியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி கடந்த 18 ஆம் தேதி சட்டசபையில் பெருமபான்மையை நிரூபித்தார். இதையடுத்து இன்று முதல்வராக முறைப்படி பொறுப்பேற்க தலைமை செயலகம் வந்தார்.

அங்கு ஜெயலலதா படத்திற்கு மரியாதை செலுத்திய எடப்பாடி ஜெயலலிதா அறைக்கு சென்றார். அங்கே அவரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் வரவேற்றனர்.

பின்னர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கமாக அமரும் இருக்கையில் அமர்ந்து முதல்வருக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

பின்னர், 500 மதுக்கடைகளை மூடுவது, மகளிர் மகப்பேறு நிதியுதவி 12 ஆயிரத்தில் இருந்து 18 ஆயிரமாக உயர்த்துவது, உழைக்கும் பெண்களுக்கான இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், மீனவர்களுக்கு தனி வீடு வசதி திட்டத்தின் கீழ் 5000 வீடுகள் கட்டும் திட்டம், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவி தொகையை இரு மடங்காக உயர்த்துவது உள்ளிட்ட 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமது ஆதரவாளர்களுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார். இதில், மதுசூதனன், பாண்டியராஜன், முனுசாமி, செம்மலை, மைத்ரேயன், பி.எச்.பாண்டியன், மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:

விரைவில் ஒ.பி.எஸ். பயண அட்டவணை அறிவிக்கப்பட இருக்கிறது.

முதலமைச்சர் பழனிச்சாமி கையெழுத்திட்ட 5 திட்டங்களுக்கும் வடிவமைப்பு கொடுத்தது ஓபிஎஸ். அது வரவேற்கதக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு