
இரட்டை இலை யை கைப்பற்ற லஞ்சம் கொடுத்த வழக்கில் திஹார் சிறைக்கு சென்று திரும்பிய தனது அடுத்த கட்ட ஆக்ஷனில் இறங்கிவிட்டார்.
தினகரன் சிறை செல்வதற்கு முன்னாள் அவரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்திருப்பதாக எடப்பாடி அணியினர் அறிவித்திருந்தனர். ஆனால் ஜாமீனில் விடுதலையான தினகரன் என்னை நீக்குவதற்கு பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்றும், கட்சி பணிகளில் மீண்டும் ஈடுபடுவேன் என்றும் விமான நிலையத்திலேயே அதிமுக இரு அணியினரையும் அதிரவைத்தார்.
அமைச்சர் ஜெயக்குமார் தினகரனுக்கு எதிரான கருத்துக்களை கூறி இருந்தார். இதற்கு பதிலடி கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஜெயக்குமாரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனால் அதிமுக அம்மா அணியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தனது ஆதரவாளர்களுடன் பெசன்ட்நகர் வீட்டில் தினகரன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில் அம்மா அணியை சேர்ந்த பல எம்.எல்.ஏ.க்கள் திரண்டு சென்று தினகரனை சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்க தமிழ் செல்வன் மற்றும் முன்னாள் அமைச்சர்களான தோப்பு வெங்கடா சலம், செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட 32 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இது எடப்பாடி அணிக்கு சிக்கலை ஏற்படுத்துமோ என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க தினகரன் டெல்லி சென்றதாக சொல்லப்படுகிறது. மேலும் அவரின் முயற்சி பலன் அளிக்காத நிலையில் டெல்லி சென்ற தினகரன் நேற்று இரவு சென்னை திரும்பிய தினகரன் பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் இதில் முன்னாள் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில் ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர்ராஜ் இன்று தினகரனை சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது ஆதரவை தெரிவித்தார். இதன் மூலம் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.