தகுதி நீக்க வழக்கு... நீதிமன்றத்தில் இருதரப்பு காரசார வாதம்... இறுதி விசாரணை 31-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

By vinoth kumarFirst Published Aug 23, 2018, 6:18 PM IST
Highlights

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை ஆகஸ்ட் 31-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையும் என நீதிமன்றம் கூறியுள்ளது. 

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கை ஆகஸ்ட் 31-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடையும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தால் ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளது. ஆகையால் இந்த வழக்கு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது. 

முன்னதாக முதல்வர் எடப்பாடிக்கு மாற்றக்கோரி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களாக இருந்த தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதையடுத்து 18 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து 16 பேரும் நீதிமன்றத்தை நாடினர். இந்த வழக்கை அப்போதைய உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கினர். இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதி சத்யநாராயணாவிடம் வழங்கப்பட்டது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மோகன் பராசரன் ஆகியோர் 3 நாட்கள் வாதிட்டனர். கடந்த 23 மற்றும் 24-ம் தேதிகளில் சபாநாயகர் மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் அரிமா சுந்தரமும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மூத்த வழக்கறிஞர் வைத்தியநானும் 3 நாட்கள் வாதிட்டார். அரசு தலைமை கொறடா சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி வாதாடினார். இதுவரை அரசு தரப்பு வாதம், டிடிவி தினகரன் தரப்பு வாதம், தேர்தல் ஆணையம் தரப்பு வாதம் எல்லாம் முடிவடைந்து இருக்கிறது.  

வழக்கில் 3-வது நீதிபதி சத்தியநாராயணன் 11-வது நாளாக வாதங்களை கேட்டறிந்தார். இன்றை வாதத்தில் ஆட்சியை கலைக்க 18 பேரும் செயல்படுகிறார்கள் என்ற புகாரை எங்களிடம் தெரிவிக்கவில்லை. மேலும் ஆளுநரிடம் அளித்த கடிதத்தில் அரசு, ஆட்சிக்கு எதிராக புகார் அளிக்கவில்லை எனவும் டிடிவி தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது. உட்கட்சி பிரச்சனைகளை 3-வது நபரிடம் எடுத்துச் செல்ல முடியாது என சபாநாயகர் மற்றும் முதல்வர் தரப்பில் வாதிடப்பட்டது. 

18 பேரின் புகார் மீது ஆளுநர் ஒருவேளை நடவடிக்கை எடுத்திருந்தால் கட்சிக்கு எதிராகவே அமைந்திருக்கும் என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் தகுதி நீக்க வழக்கை ஆகஸ்ட் 31-க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஆகஸ்ட் 31-ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு செய்ய வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

click me!