
சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தூங்க செல்வதற்கு முன் கூட, மக்களின் ஆர்வம் சமூக வலைதளங்களின் மீது தான் உண்டு .
குறிப்பாக பேஸ்புக், வாட்ஸ் ஆப் பயன்படுத்துவோரின் தூக்கம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது .அதுவும் குறிப்பாக இந்தியர்கள் தான் அதிகம் சமூக வலைத்தளங்களுக்காக அதிக நேரம் செலவிடுவதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது .
அதன்படி குறைந்தது ஒரு நாளைக்கு ஒன்றரை மணி நேரம் செலவிடுவதாக தெரிய வந்துள்ளது . இதன் விளைவாக தூக்கம் குறைகிறது. தூக்கம் இல்லாத வாழ்க்கை, மனதிற்கும் சரி , உடலிற்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதன் விளைவாக எளிதில் எந்த பிரச்சனை வேண்டுமென்றாலும் நம் உடலையும் மனதையும் பாதிக்கலாம் என்கிறது மருத்துவ குழு .
மேலும் கடந்த 2௦15 ஆம் ஆண்டு நடத்தப்பட்டஆய்வில் ,மாரடைப்பு எற்பட்டவர்களில் 9௦ சதவீத மக்கள் தூக்கமின்மையால் இறந்துள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது .
எனவே இன்டர்நெட் பயன்பாடு தேவை தான் அதற்காக இவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டுமா..? என்பதை சிந்தித்து பார்த்து செயல்படவும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.