ஒரே நாளில் "திருப்பதி தரிசனம்"...! காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டாம்...!

 
Published : May 25, 2018, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
ஒரே நாளில் "திருப்பதி தரிசனம்"...! காத்திருப்பு அறையில் காத்திருக்க வேண்டாம்...!

சுருக்கம்

we no need to wait in waiting hall in tirupathi

திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட யாருக்குதான் விருப்பம் இருக்காது.  அதுவும் கோடை விடுமுறை என்பதால் இப்போது தான் அதிக மக்கள் திருப்பதிக்கு படை எடுப்பார்கள்

அந்த வகையில் நாளுழு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது.

திருப்பதி தரிசனத்தின் முறைகள் :

சிறப்பு தரிசனம்

திவ்ய சரிசனம் ( மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு )

சர்வ தரிசனம் ( இலவச தரிசனம் )

சர்வ தரிசனம் என அழைக்கப்படும், இலவச  தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது

இதனை தவிர்க்கும் பொருட்டு, நாள்  மற்றும் நேரம் குறிப்பிட்ட டோக்கன் தரிசன  முறையை தேவஸ்தானம் அறிமுகம் செய்துள்ளது.

ஒரே நாளில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு

இதன்  மூலம் காத்திருப்பு அறையில், நீண்ட நேரம் காத்திருக்காமல் ஒரே நாளில் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு ஆதார் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

சனி ஞாயிறு

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக பக்தர்கள் வருவதால்,  அவர்களுக்காக 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், 

திங்கள் - வெள்ளி  வரை - 20 ஆயிரம் டிக்கெட்டுகளும்

புதன், வியாழன், வெள்ளி ஆகிய தினங்களில் 15 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படும் என தேவஸ்தான  நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Best Oils for Winter : குளிர்காலத்தில் சிறந்த 'சமையல் எண்ணெய்' எது தெரியுமா? இதை தவறாம பாலோ பண்ணுங்க
Teeth Stain : பற்களை மோசமாக்கும் கறைக்கு இந்த '5' தினசரி பழக்கங்கள் தான் காரணம்! உடனே நிறுத்துங்க