E-pass mandatory in Tamilnadu அதிவேகமாக பரவும் ஓமைக்ரான் தொற்று... தமிழகத்தில் இனி இதற்கு இ- பாஸ் கட்டாயம்..!

Published : Dec 17, 2021, 10:38 AM ISTUpdated : Dec 17, 2021, 10:49 AM IST
E-pass mandatory in Tamilnadu  அதிவேகமாக பரவும் ஓமைக்ரான் தொற்று... தமிழகத்தில் இனி இதற்கு இ- பாஸ் கட்டாயம்..!

சுருக்கம்

கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் 14 புதிய ஓமிக்ரான் வழக்குகள் பதிவாகியுள்ளன, நாட்டில் அதிக தொற்றுநோயான கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 87 ஆக உள்ளது. கர்நாடகாவில் ஐந்து புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்திலும் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் தெலுங்கானாவில் தலா நான்கு மற்றும் குஜராத்தில் ஒரு வழக்குகள் பதிவாகியுள்ளன. 

கோவிட் -19 நேர்மறை நோயாளிகளை நிறுவன தனிமைப்படுத்தலில் வைக்காத மாநில அரசின் கொள்கையில் வெளிப்படையான ஓட்டை, மாநிலத்தில் ஓமிக்ரான் வேகமாக பரவ உதவும் என்று நிபுணர்கள் கூறியபோதும் தெலுங்கானாவின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது. நான்கு புதிய வழக்குகளில், மூன்று பேர் ‘ஆபத்தில்லாத’ நாடான கென்யாவிலிருந்து ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கிய சர்வதேச பயணிகள், அதே நேரத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது பயணி இங்கிலாந்திலிருந்து திரும்பியவர், ஆபத்தில் உள்ள நாடாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், உள்நாட்டு விமான பயணிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உள்நாட்டு பயணிகள் அனைவருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை, இ-பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு 2 டோஸ் தடுப்பூசி சான்று கட்டாயம் என உத்தரவிடப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்கள், அறிகுறி இருந்தால் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.

 சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில விமான பயணிகள் வீடுகளிலேயே 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுரை அளிக்கப்படுகிறது.

உலக அளவில் ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவி வருவதனால் இந்தியாவில் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய விமான நிலைய ஆணையம் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தலின் படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் ஏற்கனவே உள்ள கட்டுப்பாடுகள் தொடர்ந்து செயல்படும் என்றும் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரக்கூடிய அனைத்து பயணிகளையும் ஸ்கேனர் கருவிகள் மூலம் சோதனை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களுக்கு பிற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வரக்கூடிய உள்நாட்டு பயணிகளையும் ஸ்கேனர் கருவி மூலம் சோதனையிடவும் அறிவுறுத்தியுள்ளனர். அதேபோல பிற மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை போன்ற விமான நிலையங்களுக்கு வரக்கூடியவர்கள் கட்டாயமாக இ-பதிவு முறையை பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. அதேபோல கேரளாவில் இருந்து சென்னை, கோவை போன்ற விமான நிலையங்களுக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றும் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 

அதேபோல் கோவை, சென்னைக்கு வரக்கூடிய அனைத்து பயணிகளும் கொரோனா தொற்று இல்லை என்று சான்று வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் பன்னாட்டு விமான நிலையங்கள் மட்டுமில்லாமல் உள்நாட்டு விமான நிலையங்களிலும் ஒமிக்ரான் பரவலை தடுப்பதற்காக பல்வேறு புதிய நெறிமுறைகளை இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த உத்தரவுகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. ஓமிக்ரான் தொற்று  அதிகமானால் இன்னும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Panchalimedu: சொர்க்கம் போல காட்சியளிக்கும் பாஞ்சாலிமேடு! எங்கு உள்ளது தெரியுமா?
Mood Boosters: 60 நொடியில் உங்கள் மனநிலையை மாற்றும் 10 சூப்பர் டிப்ஸ்!