வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... கந்துவட்டிக் கொடுமையை மிஞ்சும் வங்கிக் கட்டணங்கள்..!

Published : Aug 03, 2020, 04:16 PM IST
வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... கந்துவட்டிக் கொடுமையை மிஞ்சும் வங்கிக் கட்டணங்கள்..!

சுருக்கம்

வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் சேவை கட்டணங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

வங்கிகளில் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி முதல் சேவை கட்டணங்களில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

மஹாராஷ்டிரா வங்கி , ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆர்.பி.எல் ஆகிய வங்கிகளில் இந்த மாற்றங்களை கொண்டுவரப் பட்டுள்ளன. குறைந்தபட்ச நிலுவை பராமரிப்பு மற்றும் பணத்தை திரும்பப் பெறுவதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணத்தால் இதுவரை ஏதேனும் முக்கிய காரணங்களுக்கு மட்டுமே வங்கிகளில் அனுமதித்தனர். ஆனால் ஆகஸ்ட் 1 முதல் அனைத்துக் காரணங்களுக்கும் வங்கிகளில் அனுமதி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் அவரகளது வங்கி சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்சம் மாத சாரசரியை தொகையை பராமரிக்கவில்லை என்றால் அதற்கு கட்டணம் விதிக்கப்படும். பணத்தை திரும்பப் பெறுவதற்கான கட்டணமும் உயர்த்தப்படும். பாங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் இனி மாத சராசரி தொகையாக ரூ.1500க்கு பதிலாக ரூ.2000 இருக்க வேண்டும். இதனை மீறினால் மாதந்தோறும் நகர்புற கிளைகளில் ரூ.75, புறநகர் கிளைகளில் ரூ.50, கிராமப்புற கிளைகளில் ரூ.20 அபராதம் விதிக்கப்படும்.

எடிஎம்-களில் பணம் எடுப்பது மற்றும் டெபாசிட் பெறுவது மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கு மேல் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.100 வசூலிக்கப்படும். கோடக் மஹிந்திரா வங்கியில் சேமிப்பு மற்றும் கார்ப்பரேட் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, டெபிட் கார்டு-ஏடிஎம் கட்டணங்கள் ஒரு மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளுக்குப் பிறகு, பணம் திரும்பப் பெறுவதற்கான கட்டணம் ரூ .20 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ .8.5 ஆகவும் உள்ளன.

ஆக்சிஸ் வங்கி இசிஎஸ் பரிவர்த்தனைக்கு இதுவரை கட்டணம் வசூலிக்காமல் இருந்த நிலையில் இனி ரூ.25 வசூலிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 ஆகிய குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களை கையாள, 1000 எண்ணிக்கைக்கு கையாளுதல் கட்டணமாக ரூ.100 வசூலிக்கப்படும். இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Liver Side Effects : கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
பாம்புகளை வரவிடாமல் தடுக்க சிறந்த வழிகள்