சென்னைக்கு இன்று வாய்ப்பே இல்லையாம்..! என்ன மேட்டர் தெரியுமா..?

Published : Aug 14, 2019, 01:32 PM IST
சென்னைக்கு இன்று வாய்ப்பே இல்லையாம்..! என்ன மேட்டர் தெரியுமா..?

சுருக்கம்

குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் இந்த தருணத்தில் மீண்டும் நீலகிரி, தேனீ,  நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதே போன்று, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் நெல்லை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் உள்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறப்பட்டு உள்ளது 

குமரி கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று மழைக்கான வாய்ப்பு கிடையவே கிடையாது என்றும்  நாளை மிதமான மழை எதிர்பார்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

மனைவியை மகிழ்ச்சியாக வைக்கும் ரகசியம் இதுதான் - சாணக்கியர் குறிப்புகள்
பணக்காரராக மாற '5' மந்திரங்கள் இவைதான்! சாணக்கியர்