தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு...!

Published : Apr 17, 2019, 01:43 PM IST
தமிழகத்தில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு...!

சுருக்கம்

தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகம் முதல் குமரி மாவட்ட கடற்கரை பகுதி வரை மேல் அடுக்கு சுழற்சி காணப்படுவதால் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் குறிப்பாக தென் தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் சூறைக்காற்று வீசவும் வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நடுவே இந்த கோடை காலத்தில் திடீரென மழை பெய்ய வாய்ப்பு உள்ளதை நினைத்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு முன்னதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு ஓரளவிற்கு மழை பெய்து உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மற்றபடி எப்போதும் இருக்கும் 36 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையே நிலவ வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இரவில் தரமான தூக்கம் தரும் அற்புத உணவுகள்
குளிர்காலத்தில் 'ஆஸ்துமா' நோயாளிகளுக்கு ஆகாத உணவுகள்!!