மீண்டும் சவரன் 29 ஆயிரத்தை தாண்டியது..!

By ezhil mozhiFirst Published Nov 11, 2019, 7:26 PM IST
Highlights

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.

மீண்டும் சவரன் 29 ஆயிரத்தை தாண்டியது..! 

தங்கத்தின் மீதான விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்திலிருந்து குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து உள்ளது 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது. மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.5 குறைந்து 3625.00 ரூபாயாகவும், சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

மாலை நேர நிலவரப்படி...!  

கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து 3636 ரூபாயாகவும், சவரனுக்கு 88 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 20 பைசா அதிகரித்து வெள்ளி 47.70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

click me!