ஆதரவற்றோர் கருணை இல்லத்தின் மர்மம்..! தொடரும் சந்தேகமும்...புது புது நடவடிக்கையும்...

Asianet News Tamil  
Published : Mar 16, 2018, 07:10 PM ISTUpdated : Sep 19, 2018, 02:05 AM IST
ஆதரவற்றோர் கருணை இல்லத்தின் மர்மம்..! தொடரும் சந்தேகமும்...புது புது நடவடிக்கையும்...

சுருக்கம்

old age home in paleswarm problen still continous and high court ordered loacal bodies

பாலேஸ்வரம் ஆதரவற்ற முதியோர் விடுதி மர்மங்கள் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆயிரத்து 590 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுவதாகவும், உயிரிழந்தவர்கள் முறையாகப் புதைக்கப்படவோ, பதிவு செய்யப்படவோ இல்லை என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

உடல்கள் பதப்படுத்தப்பட்டு எலும்புகள் விற்பனை செய்யப்படுவதாகவும்,மேலும் இறந்த  முதியவர்களின் உடல்களை மறுத்து ஆய்வுக்கு பயன்படுத்தி வந்ததாகவும்,  எங்காவது ஆதரவற்ற முதியவர்கள் இருந்தால் அவர்களை வலுக்கட்டாயமாக அவர்களை செயின்ட் ஜான்ஸ் கருணை  இல்லத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம்  ஆம்புலனஸ் மூலம்  அளித்து செல்லப்பட்ட அனைத்து  விவரமும் வெளியானது 

பின்னர் இது குறித்த வழக்கு விசாரணை  நடைபெற்று வந்த  நிலையில்,இது தொடர்பாக சி.பி.ஐ. போன்ற தன்னிச்சையான அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடுமாறும் கோரப்பட்டிருந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் 3 வாரகாலத்துக்குள் தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Pongal 2026: பொங்கல் எந்த திசையில் பொங்கி வழிந்தால் அதிர்ஷ்டம்? இந்த திசையில் மட்டும் பொங்க கூடாது.!
குளிர்காலத்துல கரண்ட் பில் அதிகமா வருதா? இதோ இந்த சிம்பிள் மேஜிக் பண்ணுங்க.. பாதி காசு மிச்சமாகும்!