போர் வேண்டாம்..! அமைதி வேண்டும்..! i am indian but ... i am pakistan but ..! வைரலாகும் 4 சொல் மந்திரம்..!

By ezhil mozhiFirst Published Feb 28, 2019, 2:18 PM IST
Highlights

இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு உள்ளது.

இந்திய எல்லை பகுதியில் தொடர்ந்து வரும் போர் பதற்றம் காரணமாக டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டு உள்ளது.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் போர் பதற்றத்தை தவிர்க்க இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் நல்லது என பல்வேறு தரப்பினரும் பல்வேறு     நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன

இந்த நிலையில் பாக் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவுடன் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இருப்பினும் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், எல்லையோர மாநிலங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது இந்தியா.தொடர்ந்து போர் பதற்றத்துடன் இருப்பதால், எந்த நேரத்தில் எது நடக்கும் என தெரியாமல் ஒரு விதமான டென்க்ஷனில் உள்ளனர் மக்கள்.

இந்த நிலையில், போர் வேண்டாம் இரு நாடுகளிலுமே அமைதி நிலவ வேண்டும் என்பதை உணர்ந்தும் வகையில் சில வசனங்கள் இடம் பெரும் பதாகைகளை போட்டோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர் மக்கள்.

மேலும் #nowar என்ற ஹேஷ் டேக்கும் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது.போர் வேண்டாம் என்ற பாதாகையில் இடம் பெற்றுள்ள வசனம் இதுதான்..! இந்த பதாகையை வைத்துள்ளவர் இந்தியர். 

I AM INDIAN , I DONT HATE PAKISTAN, I DONT WANT A WAR, I AM NOT ALONE , NO TO WAR, PROFILE FOR PEACE

இதே போன்று பாகிஸ்தானிய நபர் கையில் பிடித்துள்ள பாதாகையில்...

I AM PAKISTAN , I DONT HATE INDIA , I DONT WANT A WAR, I AM NOT ALONE , NO TO WAR, PROFILE FOR PEACE

இவ்வாறு  குறிப்பிட்டு  உள்ளனர்...

இதன் மூலம், போர்  இல்லாமல் இரு நாடுகளுமே அமைதி பேச்சு வார்த்தையின் மூலம் ஒரு நல்ல முடிவுக்கு கொண்டுவர வேண்டும் ஏங்குகின்றனர் மக்கள். 

click me!