கஞ்சா வியாபாரிக்கு வாழ்க்கை கொடுத்த பெண் காவல் ஆய்வாளர்..! மதுரையில் நிகழ்ந்த வியப்பான சம்பவம்..!

Published : Aug 21, 2019, 03:31 PM ISTUpdated : Aug 21, 2019, 03:44 PM IST
கஞ்சா வியாபாரிக்கு வாழ்க்கை கொடுத்த பெண் காவல் ஆய்வாளர்..! மதுரையில் நிகழ்ந்த வியப்பான  சம்பவம்..!

சுருக்கம்

மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை திருத்தும் முயற்சியிலும் அவருக்கு வேறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்கவும் பெண் காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா அவர்கள் முடிவு செய்தார். 

கண்ணுக்கு தெரியாத எத்தனையோ பேர் பல்வேறு நபருக்கு உதவி செய்து வருகின்றனர். அவ்வாறு உதவி கரம் நீட்டும் மனிதர்களை பார்ப்பதே அபூர்வம் தான். அந்த வகையில் தற்போது மதுரையில் பணியாற்றும் பெண் ஆய்வாளர் ஒருவர் கஞ்சா விற்று வந்த ஒரு நபருக்கு நல்ல வாழ்க்கை அமைத்து கொடுத்து உள்ளார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்....

இது குறித்த பதிவை தமிழ்நாடு போலீஸ் முகநூல் பக்கத்தில் பதிவிட்டு பெண் காவல் ஆய்வாளருக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அதில், 

கஞ்சா வியாபாரியின் வாழ்க்கையை மாற்றிய பெண் காவல் ஆய்வாளர்

மதுரை மாநகர் திலகர் திடல் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை திருத்தும் முயற்சியிலும் அவருக்கு வேறு தொழில் ஏற்படுத்திக் கொடுக்கவும் பெண் காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர் ஷீலா அவர்கள் முடிவு செய்தார்.

அதன்பேரில் அவருக்கு உப்பு வியாபாரம் செய்ய சைக்கிளையும் அதற்கு தேவையான உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்து வாழ்க்கை பாதையை நல்வழியில் பயணம் செய்ய வழிவகை செய்து கொடுத்தார். பெண் காவல் ஆய்வாளரின் மனிதாபிமான செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்