பக்தர்களே.. காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன நேரம் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க..!

Published : Jul 04, 2019, 01:45 PM IST
பக்தர்களே.. காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசன நேரம் மாற்றம்..! நோட் பண்ணிக்கோங்க..!

சுருக்கம்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.  ஒவ்வொரு  நாளும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிர்க்கரித்த வண்ணம் உள்ளனர். 

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாபெரும் விழாவான அத்திவரதர் வைபவம் காஞ்சிபுரத்தில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கியது. இந்த விழா ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு நாளும் பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிர்க்கரித்த வண்ணம் உள்ளனர். 

காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் 11 ஆம் தேதி வரை தரிசனம் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாக காஞ்சிபுர மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

அதாவது ஜோலை 4 ஆம் தேதியான இன்று முதல் 10 ஆம் தேதி வரை வரதராஜ பெருமாள் கோவிலில் கோடை உற்சவம் நடைபெற உள்ளதால் அத்தி வரதர் தரிசன நேரத்தை மாற்றி அமைத்து உள்ளனர். அதே போன்று ஜூலை 11 ஆம் தேதியும், ஆனி கருடசேவை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

எனவே இந்த 8 நாட்களில், மாலை 6 மணி முதல் 9 மணி வரை கோவில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுவதால், இந்த குறிப்பிட்ட 8 நாட்களுக்கு மட்டும் மாலை 5 மணியுடன் தரிசன நேரம் நிறுத்தப்படுகிறது. இதற்கு மாறாக ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, காலை 5 மணிக்கே தரிசன நேரம் தொடங்கி விடும் என்பது கூடுதல் தகவல் 

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

வீட்டில் துளசி செடி வைத்தால் கிடைக்கும் நன்மைகள்
குழந்தையின் ஞாபகசக்தியை அதிகரிக்கும் '7' அற்புத உணவுகள்