Investment Tips : பெண்களுக்கு அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. எதில் முதலீடு செய்தால் லாபம்..?!

Published : Apr 03, 2024, 12:09 PM ISTUpdated : Apr 03, 2024, 12:24 PM IST
Investment Tips : பெண்களுக்கு அசத்தலான சேமிப்பு திட்டங்கள்.. எதில் முதலீடு செய்தால் லாபம்..?!

சுருக்கம்

இல்லத்தரசிகள் சிறிய பணத்தை முதலீடு செய்வதன் மூலம் ஒரு பெரிய நிதியை உருவாக்க முடியும். இதில் பல அரசு திட்டங்கள் அடங்கும்.

இன்று, வீட்டை நிர்வகிப்பதுடன், குடும்பத்தின் நிதி நெருக்கடியின் போது கைக்கு வரும் தங்கள் சேமிப்பின் நிதியையும் பெண்கள் பராமரிக்கின்றனர். ஆனால், பெரும்பாலான பெண்கள் இந்த பணத்தை வீட்டில் வைத்திருப்பார்கள்.  இதில் அவர்களுக்கு வட்டி எதுவும் கிடைக்காது. இந்தப் பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால் பணம் பாதுகாப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல லாபத்தையும் ஈட்ட முடியும். அந்தவகையில் இக்கட்டுரையில், இதுபோன்ற சில அரசு திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் மிக சிறிய தொகையை முதலீடு செய்யலாம். இதற்கு நிலையான வட்டியும் கிடைக்கிறது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் உங்கள் பணம் அதிகரிக்கும். 

பெண்களுக்கான முதலீட்டு திட்டங்கள்: 

PPF: நீங்கள் PPF இல் முதலீடு செய்தால், நீங்கள் ஆண்டுதோறும் நிலையான வட்டியைப் பெறுவீர்கள். ஆனால், உங்களுக்கு அதில் வரி விலக்கும் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சத்தை பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம். தற்போது 7.1 சதவீத வட்டியை அரசு வழங்குகிறது. அதன் முதிர்வு 15 ஆண்டுகளில் உள்ளது.

RD திட்டம்: தபால் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ள இந்த சேமிப்பு திட்டம் பெண்களுக்கு சிறந்த தேர்வாகும். சேமிப்புக் கணக்கில் பணத்தை வைத்திருக்கும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும். இதில், சேமிப்புக் கணக்கை விட அதிக வட்டி கிடைக்கும். தற்போது,   தபால் நிலையத்தின் RD திட்டத்தில் 6.7% ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. 

இதையும் படிங்க:  உங்கள் மகளின் திருமணத்திற்கு பணம் தேவையா.. ரூ. 121 டெபாசிட் செய்தால் போதும்.. ரூ. 27 லட்சம் கிடைக்கும்..

தேசிய  ஓய்வூதிய அமைப்பு: இந்திய அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இது சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இதன் கீழ் தனிநபர் சேமிப்புப் பங்குகள், அரசுப் பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்யலாம்.

இதையும் படிங்க: ஒவ்வொரு மாதமும் ரூ.42 முதலீடு செய்யுங்க.. வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்.. சூப்பர் திட்டம்.!

மியூச்சுவல் ஃபண்டுகள்: பெண்கள் கண்டிப்பாக இதில் முதலீடு செய்யலாம். ஏனெனில், இதில் எந்தவித ஆபத்தும் இல்லை. இதில் நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை  முதலீடு செய்தால், இதன் மூலம் உங்களது வருமானம் உயரும்.

ஆயுள் காப்பீடு திட்டங்கள்: எதிர்கால நலன்களைக் கருதி இந்த திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் நீங்கள் இல்லாத காலத்திலும் உங்களது குழந்தைகள் அல்லது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். குறிப்பாக, இதை நீங்கள் எவ்வளவு முன்னதாக வாங்குகிறீர்களோ, அவ்வளவு குறைவாக பிரீமியம் விகிதத்தில் செலுத்த வேண்டியிருக்கும். 

தங்கத்தில் முதலீடு: உங்களால் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் பணத்தைச் சேமிக்க முடியவில்லை என்றால், தங்கத்தில் முதலீடு செய்யுங்கள். மாத செலவுகள் போக மீதமிருக்கும் பணத்தில் அரை கிராம் அளவிற்காவது தங்க நாணயங்களை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

நகை சீட்டுகள்: உங்களிடம் மாத செலவு போக பணம் மீதி இருந்தால் நீங்கள் தங்க நகை சீட்டுகளில் முதலீடு செய்யுங்கள். ஏனெனில், நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகமாகிக் கொண்டே இருப்பதால், இந்த முறையில் நீங்கள் சேமித்தால் எதிர்காலத்தில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

இந்த 10 இடங்களில் வாயை திறக்காதீங்க! - சாணக்கியர்
மனைவியைக் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாதவை - சாணக்கியர்