Today astrology: குரு உதயத்தால் இன்று முதல் மார்ச் 27 வரை...இந்த 7 ராசிகளுக்கு பம்பர் பலன்.. இன்றைய ராசி பலன்!

Anija Kannan   | Asianet News
Published : Mar 14, 2022, 06:25 AM IST
Today astrology: குரு உதயத்தால் இன்று முதல் மார்ச் 27 வரை...இந்த 7 ராசிகளுக்கு பம்பர் பலன்.. இன்றைய ராசி பலன்!

சுருக்கம்

Today astrology: குரு உதயத்தால், இந்த 7 ராசிகர்களின் தலைவிதி இன்று முதல் தலைகீழாய் மாறும், அவை எந்தெந்த ராசிகள் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

ஜோதிடத்தின் படி, கிரகங்களின் மாற்றம் என்பது அனைத்து ராசிகளுக்கும் பொருந்தும். ஆனால், சில ராசிகளுக்கு அவை நன்மை பயக்கும். சில ராசிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். எனவே யார் யாருக்கு என்னென்ன பலன் என்பதை தரும் என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்வோம். 

சுப மற்றும் மங்களகரமான செயல்களுக்கு காரணியாக இருக்கும் வியாழன், கிரகங்களின் கடவுளான பார்க்கப்படுகிறார். ஜோதிடத்தின் படி, வியாழன் கிரகத்தின் உறவு ஆசிரியர், குழந்தைகள், மூத்த சகோதரர், கல்வி, மத வேலை, குரு அறிவு, புனித இடம், செல்வம், தர்மம், தர்மம் மற்றும் மகிழ்ச்சி என்று கருதப்படுகிறது. 

19 பிப்ரவரி 2022 சனிக்கிழமை முதல், வியாழன் கிரகம் கும்பத்தில் அஸ்தமனம் ஆனது. தற்போது மார்ச் 14 இல் இன்று குரு பகவான் மீண்டும் உதயமாகுகிறார். பஞ்சாங்கத்தின் படி, குரு பிப்ரவரி 23 அன்று அஸ்தமனம் ஆனார். தற்போது மார்ச் 27 அன்று மீண்டும் உதயமாகும். வியாழன் கிரகத்தின் இந்த உதயத்தால் இன்று முதல் இந்த 7 ராசிகளின் தலைவிதி தலைகீழாய் மாற போகிறது.

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு வியாழன் பதினொன்றாம் வீட்டில் உதயமாகிறார். நீங்கள் புதிய தொழில் துவங்கி லாபம் காணும் நேரம் இது. அலுவலகத்தில், பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உள்ளன. வீடு, மனை வாங்கும் வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும். திருமண காரியங்கள் கைகூடும்.  மொத்தத்தில் இன்று முதல் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

ரிஷபம்: 

உங்களுக்கு வியாழன் கிரகம் பத்தாம் வீட்டில் உதயம்  ஆகிறார். இன்று முதல் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும். பணியிடத்தில் சாதகமான பலன்கள் காணப்படும். பதவி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் கை  கொடுக்கும்.புதிய வேலை வாய்ப்பு உருவாக்கலாம். இந்த நேரத்தில் நீங்கள் துவங்கும் ஒரு தொழில் வேற்று அடையும்.  

சிம்மம்: 

வியாழன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் உதயமாகிறார். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். உங்கள் பிரச்சனைகளுக்கு நீதி அரசர்கள் தீர்வுகளை வழங்குவார்கள். திருமண தடை நீங்கும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். சங்கடங்கள் நீங்கும். நிதி ரீதியாக, இந்த நேரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற தாழ்வுகள் ஏற்படலாம்.

தனுசு: 

உங்கள் ராசிக்கு வியாழன் மூன்றாம் வீட்டில் உதயமாகும். வேலையில்லாமல் இருந்தால் வேலை கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு உங்கள் கனவுகளின் பின்னால் ஓடத் தொடங்குவது முக்கியம்.மொத்தத்தில் உங்கள் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.

மகரம்:  

உங்கள் ராசிக்கு வியாழன் இரண்டாம் வீட்டில் உதயமாகும். வேலைகளை மாற்றவும், நகரங்களை மாற்றவும், புதிய வணிகத்தில் பணத்தை முதலீடு செய்யவும் இது ஒரு சிறந்த நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் வளமும் பெருகும். நிதி ரீதியாக இது ஒரு நல்ல நேரம், ஆனால் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், அதை புத்திசாலித்தனமாக செய்யுங்கள்.

துலாம்: 

ஐந்தாம் வீட்டில் இருந்து வியாழன் பதினொன்றாம் வீட்டில் பார்வை பெறுவதால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.. குழப்பங்கள் நீங்கும். காதல் உறவில் வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வெளிநாட்டு பயணங்கள் கை கூடும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த ஒன்று கிட்டும்.

விருச்சிகம்: 

உங்கள் ராசிக்கு வியாழன் நான்காம் வீட்டில் உதயமாகும். வாழ்வில் மகிழ்ச்சியைப் பெறுவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும்.பண புழக்கம் இருக்கும். வீண் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். ஒருவருடன் குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகளை விழிப்புடன் கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க...Today astrology: குரு பெயர்ச்சியால்...இந்த ராசிக்காரர்களுக்கு இன்று சவாலான நாள்..! இன்றைய ராசி பலன்...!!

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரியாவின் உயரமான மலை உச்சியில் காதலியைக் கைவிட்டுச் சென்ற நபர் மீது கொலை வழக்கு!
இந்த '5' விஷயமும் அதிர்ஷ்டம் இருந்தால்தான் கிடைக்கும்- சாணக்கியர்