சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..! எந்தெந்த ஏரியாவில் பயங்கர மழை பெய்கிறது தெரியுமா..?

Published : Jul 23, 2019, 05:42 PM IST
சென்னையில் வெளுத்து வாங்கும் மழை..! எந்தெந்த ஏரியாவில் பயங்கர மழை பெய்கிறது தெரியுமா..?

சுருக்கம்

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.  

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் கணித்தது போலவே தற்போது தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் குறிப்பாக சென்னையில் நல்ல மழை பெய்து வருகிறது.

அதில் மவுண்ட்ரோடு, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, நுங்கம்பாக்கம்,அரும்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், கொளத்தூர், அண்ணாநகர், பாரிஸ், புரசைவாக்கம், வியாசர்பாடி, செனாய் நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

கடந்த 2 மாதமாக சென்னையில் நிலவி வந்த கடும் தண்ணீர் பற்றாக்குறையை சற்று போக்கும் வண்ணம் சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் அவ்வவ்போது மிதமான மழை முதல் கன மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சுமார் ஒரு மணி நேரம் பெய்து வந்த கனமழையால் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Peaceful Living Habits : மனசுல நிம்மதியே இல்லையா? இந்த '7' விஷயங்களை பண்றீங்களா??
Coconut Milk for Kids : பெற்றோரே! ஒல்லியா குழந்தைகளை கொழு கொழுனு மாற்ற சூப்பர் வழி! தேங்காய் பால் போதும்!