6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த இடம் தெரியுமா..?

By ezhil mozhiFirst Published Nov 19, 2019, 2:16 PM IST
Highlights

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலைதாயாக 32 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த இடம் தெரியுமா..? 

தற்போது குமரி கடல் பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசாக முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், கடந்த 24 மணி நேரத்தில் பொறுத்தவரையில் அதிகபட்சமாக கடலூரில் 6 சென்டி மீட்டர் மழையும் திருச்செந்தூரில் 5 சென்டி மீட்டர் மழையும்,ஆலங்குடியில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக  32 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாக கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது கூடுதல் தகவல். 

இன்று காலை முதலே சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் தற்போது நகரின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

click me!