சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.128 உயர்வு..!

By ezhil mozhiFirst Published Nov 13, 2019, 1:24 PM IST
Highlights

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது.

சரசரவென உயர்ந்த தங்கம் விலை..! ஒரே நாளில் ரூ.128 உயர்வு..! 

தங்கத்தின் மீதான விலை ஏற்ற இறக்கத்துடன் தொடர்ந்து காணப்பட்டு வந்தாலும் சவரன் விலை 29 ஆயிரத்திலிருந்து குறைந்தபாடில்லை. இந்த நிலையில் சவரனுக்கு ரூ.128 ரூபாய் உயர்ந்து உள்ளது. 

தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரித்த உடன் சவரன் விலை 30 ஆயிரத்தை தாண்டி விற்பனையானாலும் பின்னர் படிப்படியாக குறைந்து 28 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.மீண்டும் மெல்ல மெல்ல உயர்ந்த சவரன் விலை தற்போது 29 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வருகிறது. 

இன்றைய நிலையில் ஒரு சவரன் தங்கம் வாங்க வேண்டும் என்றால் செய்கூலி சேதாரம் என சேர்த்து 31 ஆயிரம் முதல் 33 ஆயிரம் ரூபாய் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இப்படிப்பட்ட தருணத்தில் இன்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து 3634 ரூபாயாகவும், சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 72 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

வெள்ளி விலை நிலவரம் 

கிராமுக்கு 128 பைசா அதிகரித்து வெள்ளி 47.80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

click me!